ஒரு நிறுவனத்தில் கடன் இல்லையென்றாலே அது நல்ல முறையில் இயங்கி வருவதோடு, அது எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யவும் உதவிகரமாக இருக்கும்.
இதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் எதிர்காலத்தில் நிச்சயம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அதன் பங்குகள் வளர்ச்சியும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு வாங்க சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. அப்படி சில பங்குகளைத் தான் தரகு நிறுவனம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. அது என்னென்ன பங்குகள்? இலக்கு விலை எவ்வளவு? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன நிறுவனங்கள்?
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
NOCIL லிமிடெட்
ஜீபிலியண்ட் ஃபுட் ஓர்க்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் கடனில்லா நிறுவனங்களாக உள்ளன. இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இலக்கு விலை
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் உலக்கு விலை 1500 ரூபாயாக வைத்துள்ளது.
இதே NOCIL லிமிடெட் இலக்கு விலை 348 ரூபாயாக 348 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.
இதே ஜூபிலண்ட் உணவின் பங்கு விலை 678 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
வாங்கலாம்
மேற்கண்ட பங்குகளை வரும் வாரத்தில் வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
NOCIL லிமிடெட் நிறுவனம் முதல் காலாண்டில் அதன் வருவாய் விகிதம் 47.7% அதிகரித்து, 509 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 16% அதிகரித்து, 15,251 டன்னாக அதிகரித்துள்ளது. இதன் எபிடா மார்ஜின் விகிதமும் 20% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் செயல்பாட்டு லாபம் 103 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
ஜுபிலண்ட் புட்
இதே ஜுபிலண்ட் புட் நிறுவனம் முதல் காலாண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 41% வளர்ச்சியினை கண்டுள்ளது. அதன் வருவாய் விகிதம் 1240.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மார்ஜினில் சற்று தாக்கம் இருந்தாலும், எபிட்டா மார்ஜின் சற்று அதிகரித்துள்ளது. இது அதன் மூலதன்ச பொருள்கள் விலை அதிகரிப்பால் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளது.
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த மூன்று ஆண்டுகளாக 44% ஏற்றம் கண்டுள்ளது. இது இன்னும் தொடர்ந்து நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் கிட்டதட்ட 18% அதிகரித்தும் 262.85 கோடி ரூபயாக அதிகரித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications