யுனைடெட் ப்ரூவெரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வர்த்தக செய்ய செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் முழுமையாக தடை செய்ய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்புகளையும் இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ளது.
யுனைடெட் ப்ரூவெரிஸ் லிமிடெட் நிறுவனம் விஜய் மல்லையா-விற்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
இணக்கமில்லாத நிதியியல் முடிவுகள் மற்றும் இரு காலாண்டுகளாக செலுத்தப்படாத அபராதங்கள் ஆகியவற்றிக்கு இந்த தடை விதிக்கப்பட உள்ளது என பங்குச்சந்தை அமைப்புகள் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் அனைத்து விதமான பணிகளையும் யுனைடெட் ப்ரூவெரிஸ் செய்துவிட்டால், தடை நீக்கப்படும். இல்லையெனில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் முழுமையான தடை விதிக்கப்படும்.