அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள் மோதலுக்கு முடிவு கட்டி, போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக பங்குச் சந்தைகள் நம்பிக்கையுடன் உயர்ந்தன.
இஸ்ரேல் பங்குச் சந்தை கடந்த ஐந்து நாட்களில் 4% உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது. வளைகுடா நாடுகளில், சவுதி அரேபியாவின் முக்கிய குறியீடு 2.1% உயர்ந்தது, துபாயின் பங்குச்சந்தை 3.1% உயர்ந்து, டிசம்பர் மத்தியில் இருந்து மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்ததுள்ளது. கடைசியாக நேற்று ஈரான் நாட்டின் ஏவுகணை தாக்குதலை எதிர்கொண்ட கத்தார் பங்குச்சந்தை குறியீடு 2% உயர்ந்தது.

ஆனால், இந்தியாவில் சென்செக்ஸ் இன்று ஆரம்பக்கட்ட உயர்வான 1100 புள்ளிகள் உயர்வில் இருந்து 800 புள்ளிகள் சரிந்து. இன்று அமெரிக்காவில் S&P 500 குறியீடு 1%க்கு மேல் உயர்ந்து, நாளை ஆசிய சந்தைகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால், ஜூன் 25 அன்று இந்திய பங்குச் சந்தை, குறிப்பாக வங்கி மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள், நிலையான முன்னேற்றத்துடன் தொடங்கலாம்.
இத்தகைய போர் கால பதற்றங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய உத்திகளைப் பின்பற்றலாம். புவிசார் அரசியல் நெருக்கடிகளின் போது பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகளைப் பாதுகாக்க, முதலீட்டாளர்கள் மூன்று அடிப்படை உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.
முதலாவதாக, பயத்தால் பங்குகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தை சரிவு ஏற்படும்போது, பங்குகளை உடனடியாக விற்பது இழப்புகளை அதிகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, இந்திய சந்தையின் சமீபத்திய சரிவு தற்காலிகமானது தான். இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டு மதிப்பை இழக்கிறோம் என பயத்தில் பங்குகளை விற்பனை செய்தால் பெரும் லாபத்தை இழக்க கூடும். இதனால் பொறுமையாக இருப்பவர்கள் அதிக லாபத்தை காணலாம். இதேபோல் நீங்கள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் நிதியியல் அடிப்படையில் வலுவான நிலையில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, எப்போதும் உங்கள் பங்குச்சந்தை முதலீட்டை பன்முகப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் முதலீடு பங்குகள், பத்திரங்கள், தங்கம், மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வது, ஒரு துறையில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இதேபோல் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகளையும், துறைவாரியாகவும், சந்தை வாரியாகவும் ன்முகப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மூன்றாவதாக, முதலீட்டை நிலையாக தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்வது, சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைத்து, நீண்டகால லாபத்தை உறுதி செய்யும்.
முதலீட்டாளர்களுக்கு ஒரு அட்வைஸ்: புவிசார் அரசியல் நெருக்கடிகள், எண்ணெய் விலை மாற்றங்கள், மற்றும் உலகளாவிய பொருளாதாரப் போக்குகள் ஆகியவை பங்குச் சந்தைகளை எப்போதும் பாதிக்கும் காரணிகள். இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம், எண்ணெய் விலைகளைக் குறைத்து, உலகளாவிய சந்தைகளுக்கு நம்பிக்கையை அளித்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தற்போதைய சந்தை சூழ்நிலையில் வங்கி, உள்கட்டமைப்பு, மற்றும் விவசாயத் துறை சார்ந்த பங்குகள் சரிவில் இருந்து வேகமாக மீட்சி அடையலாம். ஆனால் எதிர்பாராத சரிவுகளுக்கு தயாராக இருப்பது அவசியம். நீண்டகால முதலீட்டு இலக்குகளை மனதில் வைத்து, நிலையான முதலீட்டு முறைகளைப் பின்பற்றுவது, சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள உதவும்.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாடு: ரயில் பயணிகளுக்கு உணவு விநியோகத்தில் சிக்கலா? IRCTC வெளியிட்ட புது அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டில் சிக்காம இருக்கனுமா? உங்க வீட்டு கேஸ் அடுப்ப இப்படி யூஸ் பண்ணுங்க!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!



Click it and Unblock the Notifications