இந்த வாரத்தின் ஐந்து வர்த்தக நாட்களில், நேற்று தவிர, மற்ற நான்கு வர்த்தக நாட்களும் ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது சென்செக்ஸ்.
கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் 39,728 புள்ளிகளில் இருந்து 40,685 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது.
நேற்று (22 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,558 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,728 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ். வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,811 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 127 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,685 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
BSE நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 19 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 11 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,867 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,688 பங்குகள் ஏற்றத்திலும், 1,026 பங்குகள் விலை இறக்கத்திலும், 153 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 123 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் மாருதி சுசூகி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப்பரேஷன், பஜாஜ் ஆட்டோ போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச் சி எல் டெக், ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோட்டக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஆசிய சந்தைகள்
இன்று (23 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், தைவானின் தைவான் வெயிடெட், தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹாங் காங்கின் ஹேங் செங் சந்தை 0.58 % ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (23 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.68 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.58 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 1.24 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.