இந்திய பங்கு சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஏற்ற பாதையில் இருந்து வருகின்றது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு , கடந்த 6 மாதத்தில் சற்றே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.
கடந்த 6 மாதத்தில் இந்திய பங்கு சந்தையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையானது, கணிசமாக குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றது. இதற்கு என்ன காரணம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இதற்கும் மத்திய பட்ஜெட்டிற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன பிரச்சனை?
முதலாவது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, உள்நாட்டு பொருளாதார காரணிகள், விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம், விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என பலவும் சந்தைக்கு எதிராகவே உள்ளது.
இரண்டாவது பங்கு சந்தையில் பற்பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மேலும் பிரச்சனையாக அமையலாம்.
சிக்கலான வரி திட்டங்கள்
மூன்றாவதாக சிக்கலான வரி திட்டங்கள் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மேற்கொண்டு சுமையாக இருக்கலாம். இது சந்தையில் நுழைவதை தடுக்கலாம். இந்த பட்ஜெட்டில் பங்கு சந்தை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சில அறிவிப்புகளை கொடுக்கலாம்.
குறுகிய கால மூலதன வரி
பங்கு சந்தையில் கிடைக்கும் வருமானமும் பல வகையாக பிரிக்கப்படுகிறது. இதற்கு வரி விகிதமும் பல வகைகளில் பிடித்தம் செய்யப்படுகின்றது. ஆக பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களை ஊக்குவிக்க குறுகிய கால மூலதன ஆதாய வரியில் விலக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். 111ஏ - வின் கீழ் @15% வரியுடன்+ செஸ்+ மற்ற கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
பல முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டினை வகைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், நீண்டகால முதலீடாக வகைப்படுத்த 3 ஆண்டுகள் என்பதை 2 ஆண்டுகளாக குறைக்கலாம். இது சில்லறை முதலீட்டாளர்களை அதிகரிக்க உதவும், வணிகத்தினையும் அதிகரிக்க உதவும்.
எஸ்டிடி & சிடிடி
மேலும் பங்கு சந்தையில் விதிக்கப்படும் எஸ் டிடி(stt) கட்டணமும், கமாடிட்டிகளுக்கு விதிக்கப்படும் ctt கட்டணமும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது கூடுதல் கட்டணமாகவே உள்ளது. ஆக இந்த பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகினால் நன்றாக இருக்கும் எனலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications