இந்திய பங்குச்சந்தையில் பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள் சமீப காலங்களில் பல மடங்கு லாபம் கொடுத்த போதிலும், கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்புத் துறை பங்குகள் 90% வரை உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் வாயிலாக, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது, இந்திய பாதுகாப்பு துறையை சேர்ந்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.1.76 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதன் மூலம் இத்துறை முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை முன்னிட்டு, பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனங்களான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) 90 சதவீதமும் மற்றும் மசகான் டாக் 73 சதவீதம் லாபத்தை பெற்று முதலிடத்தில் உள்ளன.
மோடி அரசின் பாதுகாப்பு துறையின் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்புக் கொள்கையால், இத்துறை நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய ஆர்டர்களை பெற்று வருகிறது. இதன் வாயிலாக புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி சமீபத்தில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்ப பராஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 63% உயர்ந்துள்ளன.
இதேபோல் கொச்சின் ஷிப்யார்டு (49%), BEML (28%), டேட்டா பேட்டர்ன்ஸ் (23%) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (12%) ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன.
மேலும் ஒரு வருட காலகட்டத்தைப் பார்க்கும்போது, பாதுகாப்பு துறை நிறுவனம் மீதான முதலீடுகளில் கிடைக்கும் லாபம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. கொச்சின் ஷிப்யார்டு பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 9 மடங்கு, GRSE 4 மடங்கு உயர்ந்துள்ளது, மற்ற பாதுகாப்பு துறை பங்குகள் குறைந்தது இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
சரியாக சொல்ல வேண்டுமெனில் மோடி அரசு 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை தொடங்கியதில் இருந்தே பாதுகாப்பு துறையில் முதலீடு செய்தவர்கள் 10 மடங்கு லாபம் ஈட்டியுள்ளனர்.
பாதுகாப்பு துறைக்கு- உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான அரசின் தொடர் முயற்சிகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகிய இரட்டை வளர்ச்சி இன்ஜின்கள் கொண்டுள்ளதன் காரணமாக, பாதுகாப்பு துறை பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் துறையாகப் பார்க்கப்படுகிறது.
ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், பாதுகாப்பு துறை பங்குகளில் முதலீடு மற்றும் மூலதன செலவினங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் கட்டாயம் வெளியாகும் என கணிக்கப்படுவதால் இத்துறை பங்குகள் கடந்த சில மாதங்களாக பெரும் லாபத்தை அளித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்பு துறையில் அதிகம் லாபத்தைப் பதிவு செய்த டாப் 10 பங்குகளின் பட்டியல்
- GRSE - 90 சதவீத உயர்வு
- Mazagon Dock - 73 சதவீத உயர்வு
- Paras Defence - 63 சதவீத உயர்வு
- Cochin Shipyard - 49 சதவீத உயர்வு
- BEML - 28 சதவீத உயர்வு
- Data Patterns (India) - 23 சதவீத உயர்வு
- Bharat Dynamics - 17 சதவீத உயர்வு
- Bharat Electronics - 15 சதவீத உயர்வு
- Hindustan Aeronautics - 12 சதவீத உயர்வு
- Astra Microwave Products - 3 சதவீத உயர்வு
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications