இந்திய மக்கள் மிகவும் எதிர்பார்த்த மத்திய பட்ஜெட் 2026 (Budget 2026) தாக்கல் செய்யப்பட்ட உடன் பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பங்குச் சந்தை இயங்கிய நிலையில், பொதுத்துறை வங்கி குறியீடு 2% முதல் 6% வரை இழப்பை சந்தித்தது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை பட்ஜெட் தாக்கல் காரணமாக திறக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இல்லாதது பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது. இதேவேளையில் STT உயர்த்தப்பட்டது மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உதாரணமாக பேங்க் ஆஃப் இந்தியா பங்கு 8.4% சரிந்து பொதுத்துறை வங்கி குறியீட்டில் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்த நிறுவனமாக மாறியுள்ளது. இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை 6% முதல் 7% வரை இழந்துள்ளன. பொதுத்துறை வங்கி குறியீட்டில் உள்ள மற்ற பங்குகளும் 2% முதல் 5% வரை சரிவை சந்தித்துள்ளன.
பட்ஜெட் 2026-27இல் மத்திய அரசு சந்தையிலிருந்து ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகம் என்பதால் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகளை விற்பனை செய்தனர். எதற்காக விற்பனை செய்தனர்.
மொத்த சந்தை கடன் ரூ.16.3 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2027ஆம் நிதியாண்டில் வட்டி செலுத்துதல் தவிர்த்த நிகர கடன் ரூ.11.7 லட்சம் கோடியாக உள்ளது.
மத்திய அரசு அதிக கடன் வாங்குவதால் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் (bond yields) உயர்த்தும். இது பொதுத்துறை வங்கிகளுக்கு எதிர்மறையானது. பத்திர முதலீட்டில் லாபம் உயர்ந்தால் வங்கிகளின் மார்க்-டு-மார்க்கெட் போர்ட்ஃபோலியோவில் கருவூல இழப்பு ஏற்படும். இதுவே பங்கு விற்பனைக்கு முக்கிய காரணம்.
இன்று பத்திர சந்தை மூடப்பட்டுள்ளது. பங்குச் சந்தை மட்டும் இயங்கியது. நாணய சந்தை திங்கள்கிழமை தொடங்கும் என்பதால் பெரும் சரிவை பதிவு செய்யும். மேலும் நாளை வெளிநாட்டு நாணய முதலீட்டாளர்களும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1546.84 புள்ளிகள் சரிந்து பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 495.20 புள்ளிகள் சரிந்துள்ளது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications