ஐடி துறையினை சார்ந்த முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
இதன் தற்போதைய விலை நிலவரம் 3,570 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது 4,400 ரூபாயினை தொடலாம் என ஷேர்கான் நிறுவனம் கணித்துள்ளது. இது கிட்டதட்ட 23% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷேர்கான் நிறுவனத்தின் அறிக்கையின் படி, டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி விகிதமானது வலுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
நாட்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல் தேவையானது பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, டிஜிட்டல் தேவையால் ஒப்பந்தம் அதிகரிப்பு, முதலீடுகள் அதிகரிப்பு என பல காரணிகளினால் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய ஒப்பந்தங்கள்
குறிப்பாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை அளித்து வருகின்றது. ஐடி துறையில் முன்னணி நிறுவனமாகவும் வளர்ச்சி கண்டு வருகின்றது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாகவே மிகப்பெரிய ஒப்பந்தங்களை செய்து வருகின்றது.
எவ்வளவு வளர்ச்சி
இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது காலாண்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வலுவான தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், 2022ம் நிதியாண்டின் பாதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாய்ப்புகள் அதிகம்
தற்போது பெரியளவிலான ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ள நிலையில், ஊழியர்கள் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் தேவையானது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் எனலாம்.
இண்றைய நிலவரம் என்ன?
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் கிட்டதட்ட 1% குறைந்து, 3556.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய அதிகபட்ச விலை 3606 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையானது 3510.15 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இயில் இந்த பங்கின் விலையானது 0.84% குறைந்து, 3557.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 3605 ரூபாயாகும். இன்றைய குறைந்த விலை 3509.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
****Disclaimer: இந்த பங்கினை தரகு நிறுவனம் பரிந்துரை செய்திருந்தாலும், இதனை வாங்கும் முன்பு முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்கள் இறுதியாக முடிவெடுக்கலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications