கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் எனும் ஸ்மால் கேப் நிறுவன பங்கு, தொடர்ந்து 76 வர்த்தக தினங்களாக உயர்ந்து வருகிறது. இந்த பங்கின் மதிப்பு அக்டோபர் 8 அன்று, தனது உச்சபட்ச மதிப்பான ரூ. 138 என்ற அளவை எட்டியது. இந்த ஆண்டு மட்டும் இந்த பங்கு கிட்டத்தட்ட 760 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளது.
கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு தகவல் தொழில்நுட்ப, விளையாட்டு மற்றும் டிஜிட்டல் வணிக நிறுவனமாகும். இது இ-ஸ்போர்ட்ஸ், நேரடி விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டு நிகழ்வுகள், பிரபலங்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப நுண்ணறிவுத் துறையில் தனது விரிவாக்கத் திட்டங்களை அறிவித்தது. இதில் செயற்கை நுண்ணறிவு (AI/ML), பிளாக்செயின் தொழில்நுட்பம், தரவு மையங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையம் (GCC) ஆகிய தொழில்நுட்ப சேவைகள் அடங்கும்.
கோலாப் நிறுவனம் தனது ₹5 கோடி அளவிலான ஆக்சிலரேட்டர் திட்டத்தைப் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், புதிய வணிகங்களில் முதலீடு செய்தல், கூட்டு முயற்சிகளில் ஈடுபடுதல் மற்றும் AI, பிளாக்செயின், GCC சேவைகளில் தங்கள் நிபுணத்துவத்தை வலுப்படுத்த கையகப்படுத்துதல்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
இந்த ஸ்மால் கேப் பங்கு மதிப்பு ஜூன் 18 முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அக்டோபர் 8 அன்று, 78வது நாளாக தொடர்ந்து இந்த பங்கு லாபத்தில் இருந்தது, அதன் அதிகபட்ச விலையை எட்டியது. இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 417 சதவீத லாபத்தை ஈட்டியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கோலாப் பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் 12,000 சதவீதத்திற்கும் மேலான லாபத்தை அளித்துள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பங்கு 2,100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை சுமார் 760 சதவீத லாபத்தை ஈட்டியுள்ளது.
இதுவரை இந்த பங்கு இரண்டு முறை பிரிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மார்ச் 19, 2024 அன்று 1:5 என்ற விகிதத்திலும், இரண்டாவது முறையாக மே 21, 2025 அன்று 1:2 என்ற விகிதத்திலும் பிரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பிரமோட்டர்கள் 38% பங்கும், சில்லறை முதலீட்டாலர்கள் 62% பங்கும் வைத்துள்ளனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications