லேப்டாப் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய லெனோவா.. எகிறும் டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு விலை

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிகானிஸ் உற்பத்தி சேவை நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ்-ன் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனம் தற்போது லெனோவா நிறுவனத்துக்கு லேப்டாப்கள் மற்றும் நோட்புக்ஸ் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே இந்தியாவில் சியோமி-யின் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

லேப்டாப் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய லெனோவா.. எகிறும் டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு விலை

இது தொடர்பாக டிக்சன் டெக்னாலஜிஸ் கடந்த 11ம் தேதியன்று பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு முழு சொந்தமன பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் 2.0ன் கீழ், லேப்டாப்கள் மற்றும் நோட்புக்ஸ்-களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை லெனோவா வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வெளியானதையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கின் விலை 52 வார கால உச்சமாக ரூ.6,764ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு பங்கின் விலையில் சரிவு ஏற்பட்டது.

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான அதுல் பி. லால் கூறுகையில், லெனோவா நிறுவனம் ஐ.டி. ஹார்டுவேர் தயாரிப்புகளை எவ்வாறு தயாரிப்பது மற்றும் செயல்முறைகளை உலகளவில் கொண்டு வரும். டிக்சன் மீது லெனோவா வைத்துள்ள நம்பிக்கையால் நாங்கள் மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அடைகிறோம்.

லேப்டாப் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய லெனோவா.. எகிறும் டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு விலை

மேலும் இந்த கூட்டணி எங்களின் சிறப்பையும், சிறந்த செயல்பாட்டின் சாதனையையும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். மேலும் இது இந்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிபலிக்கிறது.

லெனோவா அவர்களின் மலிவு விலை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த கூட்டணி இந்தியாவில் உள்ளூர்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

அண்மையில் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த நவம்பர் 30ம் தேதியன்று புதிய அதிநவீன ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+