நாட்டின் பிரபல ஆன்லைன் டெலிவரி வர்த்தக நிறுவனங்களான சோமெட்டோ, பிளிங்கிட் ஆகியவற்றின் உரிமையாளர் எட்டர்னல் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களி்ன் உரிமையை (பங்கு மூலதனத்தை) 49.5 சதவீதமாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு சோமெட்டோ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, உள்நாட்டில் தகுதி வாய்ந்த நிதிநிறுவனங்களுக்கு பங்கு ஒதுக்கி 100 கோடி டாலர் திரட்ட ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, இந்நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் 50 சதவீதத்தை தாண்ட வழிவகுத்தது. சோமெட்டோ நிறுவனம் உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் 100 கோடி டாலர் நிதி திரட்டியதையடுத்து, நிறுவனத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மூலதனம் 50 சதவீதத்தை தாண்டியது.

தற்போது அன்னிய பங்கு மூலதனத்துக்கு 49.5 சதவீத உச்சவரம்பு மற்றும் இந்தியருக்கு சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக (ஐஒசிசி) இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் தற்போதுள்ள உள்நாட்டு விற்பனையாளர்களிடமிருந்து இந்நிறுவன பங்குகளை வாங்க முடியாது. இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது, 2025 மார்ச் நிலவரப்படி, எட்டர்னல் நிறுவனத்தில் 44.8 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கிறார்கள்.
எட்டர்னல் நிறுவனம் அன்னிய முதலீட்டு உரிமையை 49.5 சதவீதமாக குறைத்தன் பின்னணியில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், சோமெட்டோ நிறுவனம் உள்நாட்டு உரிமையை அதிரிக்க மற்றும் இந்தியருக்கு சொந்தமான மற்றும் கட்டுப்படுத்தப்படும் நிறுவனமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அடுத்து நிறுவனத்தில் அன்னிய பங்குமூலதனம் 50 சதவீதத்துக்கு மேல் இருந்தால், அதுவே ஒரு வணிகத்துக்கு தடைக்கல்லாக அமைந்து விடும்.
அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளின்படி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மார்க்கெட்பிளேஸ் மாடலில் மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் செயல்படும் நிறுவனங்கள், விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு தளத்தை மட்டுமே வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பொருட்களை விற்பனைசெய்வது, பொருட்கள் கையிருப்பு வைப்பது மற்றும் சொந்தமான விநியோக நிலையங்கள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் நிறுவனத்தில் அன்னிய முதலீடு 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் இந்த தடைகள் பொருந்தாது. உதாரணமாக, ஃபர்ஸ்ட்க்ரை என்ற பெயரில் செயல்படும் பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ் லிமிடெட், தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் குழந்தைகள் பொருட்களுக்கான இந்தியாவின் சர்வசேனல் தளமாகும். இந்நிறுவனம் 49.5 சதவீத அன்னிய உரிமை வரம்பை வைத்துள்ளது. இந்நிறுவனம் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்கிறது மற்றும் அதன் சொந்த சரக்குகளை நிர்வகிக்கிறது. எட்டர்னல் இந்த நோக்கத்துக்காகத்தான் தனது நிறுவனத்தில் அன்னிய உரிமை வரம்பை 49.5 சதவீதமாக குறைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications