அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமெரிக்கா முதலில் என்ற கொள்கை, சீன பங்குச் சந்தைகளின் எழுச்சி போன்றவை, இந்தியாவை விற்று, சீனாவை வாங்கு என்ற வர்த்தகத்தை தூண்டியுள்ளது. அதாவது இந்திய பங்குகளை விற்பனை செய்து, சீன பங்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுத்தியுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. 2024 அக்டோபர் முதல் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி டாலருக்கு மேல் சரிவடைந்துள்ளது. அதேசமயம், இதே காலத்தில் சீன பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
டீப்செக்கின் அபரிதமான உயர்வு, அலிபாபா மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் அறிவித்த திடமான வருவாய் வளர்ச்சி மற்றும் நிறுவன பங்குகளின் மதிப்பு குறைவாக இருப்பது போன்றவற்றால் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியாவில் பங்குகளை விற்பனை செய்து விட்டு, சீன பங்குகளை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் சீனாவின் ஹேங் சென் 16 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது அதேவேளையில், நிப்டி 2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

சீனாவின் சந்தை எழுச்சிக்கு அந்நாட்டு அரசின் பொருளாதார ஊக்குவிப்பு, ஒழுங்குமுறை தளர்வு மற்றும் முதலீட்டாளர் நட்பு கொள்கைகள் ஆகியவற்றின் கலவையே காரணமாகும். அடுத்ததாக, சிஎஸ்ஐ300 இன்டெக்ஸ் தொடர்ந்து 3 ஆண்டுகளாக சரிவை சந்தித்தது. அதன் பிறகு தான் சீன சந்தையின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 9 ஆண்டுகளாக வளர்ச்சி கண்டது. இதனால் விலை அதிகமாக உள்ள இந்திய பங்குகளுடன் ஒப்பிடும்போது, சீன பங்குகளின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளதால், அன்னிய முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தை பக்கம் திரும்பி விட்டனர்.
BofA அண்மையில் நடத்திய சர்வதேச பண்ட் மேலாளர் சர்வேயில் பல ருசிகரமான தகவல்கள் கிடைத்தது. அந்த அறிக்கையின்படி, 2025ம் ஆண்டில் ஈரோஸ்டாக்ஸ், நாஸ்டாக் மற்றும் ஹேங் செங் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட பங்கு குறியீடுகளாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இது இந்திய பங்குச் சந்தைகள் மீதான அன்னிய முதலீட்டாளர்களின் உற்சாகம் குறைந்து வருவதை குறிக்கிறது. இருப்பினும் விரைவில் இந்திய பங்குச் சந்தைக்கு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்புவார்கள் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
டெசெர்வின் இணை நிறுவனர் வைபவ் போர்வால் கூறுகையில், இந்திய பங்குகளின் அதிக மதிப்பீடு அதை குறைந்த கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. தற்போது சந்தை சரிவு இருந்தபோதிலும், இந்தியாவின் நீண்டகால வளர்ச்சி கதை அப்படியே உள்ளது. வலுவான உள்நாட்டு தேவை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை நிறுவன வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் வளர்ச்சி மீண்டும் வருவதால், அடுத்த 3 முதல் 6 மாதங்களில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி முதலீடு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
Story written by: Subramanian
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications