வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்தை பெற்ற 10 பங்குகள்.. வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்..!!

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் செப்டம்பர் காலாண்டில் நிஃப்டி-500 குறியீட்டில் 10 ஸ்மால் கேப் பங்குகளில் தங்கள் பங்குகளை அதிகரித்தனர். ஸ்டாக் எட்ஜ் தரவுகளின்படி, நுவாமா வெல்த் மேனேஜ்மென்ட், டெக்னோ எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினியரிங் கம்பெனி, ஹொனாசா கன்ஸ்யூமர் ஆகிய ஏழு பங்குகளில் கூடுதல் பங்குகள் வாங்கப்பட்டன.

நுவாமா வெல்த் மேனேஜ்மெண்ட்:
செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் கூடுதலாக 7.1 சதவீதப் பங்குகளைப் வாங்கியுள்ளனர். ஜூன் காலாண்டில் வெறும் 6.73 சதவீத பங்கைக் கொண்டிருந்தாலும், செப்டம்பர் காலாண்டின் முடிவில் 19.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வத்தை பெற்ற 10 பங்குகள்.. வாங்கி குவித்த முதலீட்டாளர்கள்..!!


டெக்னோ எலக்ட்ரிக் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனம்:
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஜூன் காலாண்டில் 4.39 சதவீத பங்குகளை வைத்திருந்தனர். இது செப்டம்பர் காலாண்டில் 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது Q2 இல் 5.4 சதவீத பங்குகளை வாங்கினார்கள்.

ஹொனாசா கன்சுயூமர்ஸ் :
செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூடுதலாக 5.4 சதவீத பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூன் காலாண்டில் 13.95 சதவீதமாக இருந்த பங்கு செப்டம்பரில் 19.31 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வீட்டுக் கடன் வாங்கினாலும் நீங்கள் பல லட்சங்களை சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?

ஜிஇ வெர்னோவா டி&டி இந்தியா:
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் 2.04 சதவீதத்தை Q2 இல் வைத்திருந்தனர். ஆனால், செப்டம்பர் காலாண்டில் கூடுதலாக 4.8 சதவீத பங்குகளை வாங்கி 6.82 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.

ஸ்டெர்லிங் மற்றும் வில்சன் எனர்ஜி : இந்த பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 10.07 சதவீத பங்குகளை வைத்திருந்தாலும், செப்டம்பர் காலாண்டில் கூடுதலாக 4 சதவீத பங்குகளை வாங்கி 14.08 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.

இந்தியன் எக்ஸ்ஜேஞ்ச் எனர்ஜி:
இந்தப் பங்கில் 11.66 சதவீதப் பங்குகளை வைத்திருந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் கூடுதலாக 4 சதவீதப் பங்குகளை வாங்கி 15.66 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.

QR கோடு ஸ்கேன் செய்தால் ரூ.5 லட்சம் கடன்.. முத்தூட் ஃபின்கார்ப் வெளியிட்ட புதிய வசதி..!!

சிக்னேச்சர் குளோபல் இந்தியா:
முதல் காலாண்டில் 8.33 சதவீத பங்கை வைத்திருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் கூடுதலாக 3.9 சதவீத பங்கை வாங்கி 12.21 சதவீதமாக உயர்த்தியுள்ளனர்.

மகாநகர் எரிவாயு :
முதல் காலாண்டில் இந்த பங்குகளில் எஃப்ஐஐகள் 31.49 சதவீத பங்கை வைத்துள்ளனர். இரண்டாம் காலாண்டில் கூடுதலாக 2.7 சதவீத பங்குகள் வாங்கப்பட்டு, 34.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

பிவிஆர் ஐநாக்ஸ்:
இந்தப் பங்கின் பங்கு 18.07 சதவீதத்தில் இருந்து 20.69 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. Q1 உடன் ஒப்பிடும்போது, ​​Q2 இல் கூடுதலாக 2.6 சதவிகிதப் பங்கு வாங்கப்பட்டது.

பிஎன்பி ஹைசிங் ஃபைனான்ஸ்:
இந்தப் பங்கில் கூடுதலாக 2.5 சதவீத பங்குகள் வாங்கப்பட்டன. 2வது காலாண்டின் முடிவில் 20.42 சதவீத பங்கை வைத்திருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+