ரசாயனத் துறையைச் சேர்ந்த ஸ்மால் கேப் வகைப் பங்கான ஃபினியோடெக் கெமிக்கல் (Fineotex Chemical Limited) பங்குகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் பங்குதாரர்களுக்கு 1205 சதவிகிதம் வருமானம் கொடுத்த நிலையில் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தில் பிரபல ஏஸ் முதலீட்டாளரான ஆஷிஷ் கச்சோலியா ரூ. 106.2 கோடி மதிப்புள்ள 2.74 சதவீதம் (அதாவது 31,35,568 பங்குகள்) பங்குகளை வைத்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் ஆஷிஷ் கச்சோலியா மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கும் இந்த பங்குகளில் பெரும் பங்குகளை வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஃப்ஐஐகள் நிறுவனத்தில் 3.14 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் அது 3.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் பங்குக் கண்ணோட்டத்தைப் பார்த்தால், இன்றைய வர்த்தகத்தில் ஃபினியோடெக் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 0.9 சதவீதம் குறைந்து ரூ. 340ல் முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 458.85 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூ. 303.80 அக உள்ளது.
இந்தப் பங்கு கடந்த வாரத்தில் சுமார் 1 சதவிகிதம் இழந்துள்ளது, கடந்த மாதத்தில் இந்தப் பங்கு சுமார் 5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தப் பங்கு கடந்த ஆறு மாதங்களில் சுமார் 10 சதவிகிதம் இழந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தப் பங்கு சுமார் 0.06 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1205 லாபம் அதன் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 3930 கோடி ஆகும்.
நிறுவனத்தின் விவரத்திற்கு வரும்போது, ஃபினியோடெக் கெமிக்கல் லிமிடெட், நாட்டில் ஜவுளி ரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாகப் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிறுவனம் முக்கியமாக ஜவுளி, ஆடைத் தொழில்கள், நீர் சுத்திகரிப்புத் தொழில், தோல் தொழில், கட்டுமானத் தொழில், பெயிண்ட் தொழில், வேளாண் இரசாயனத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான சிறப்பு செயல்திறன் இரசாயனங்களை உற்பத்தி செய்கிறது.
இந்த நிறுவனம் 1979 இல் சுரேந்திர திப்ரேவாலாவால் நிறுவப்பட்டது. மேலும் இந்த நிறுவனம் மும்பையின் நிதி தலைநகரில் தனது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஜூன் 2024 வரை மொத்தம் 205 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications