அமேசான் நிறுவனம் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வியாழக்கிழமை வெளியிட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை சந்தை மூலதனமானது 1 டிரில்லியன் டாலரினை பெற்று உலக சாதனை படைக்கும் என்று நாஸ்டாக் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பங்கு சந்தை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள் சில மாதங்களாக ஆல்பாபெட், ஆப்பிள் மற்றும் அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் எது முதல் 1 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனம் படைத்த நிறுவனமாக உருவெடுக்கும் என்று விவதங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதனை வெற்றிகரமாக அமேசான் செய்து காட்டும் என்று பங்கு சந்தை எக்ஸ்சேஞ்சுகள் தெரிவித்துள்ளன.
முதல் காலாண்டு அறிக்கையில் அமேசான் நிறுவனத்தின் லாபம் இரட்டிப்பாகியுள்ளதாக அறிவித்த நிலையில் வெள்ளிக்கிழமை அமேசானின் பங்குகள் 8 சதவீதம் வரை உயர்ந்து.
அமேசானின் ரீடெய்ல் வணிகம் பெரிய அளவில் வளர்ச்சியினை அளிக்கவில்லை என்றாலும் அதன் பிற வணிகங்கள் உதவியுடன் அமேசான் டிரில்லியன் டாலர் நிறுவனமாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.
இன்நிலையில் அமேசானின் பங்குச்சந்தை மூலதனமானது 762 பில்லியன் டாலராக தற்போது உள்ளது.