அதானி ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைகளுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்கள் சரிவினை ஒரு புறம் கண்டது எனில், மறுபுறம் அதானி குழுமத்தில் முதலீடு செய்த எஸ்பிஐ மற்றும் எல்ஐசி பங்குகளும் சரிவினைக் கண்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் நிறுவனம், கெளதம் அதானியின் அதானி குழுமத்தின் மீது பற்பல மோசடியான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் எஸ்பிஐ வங்கியானது டிசம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சியினை கண்ட நிலையிலும், எஸ்பிஐ பங்கானது பலத்த ஏற்ற இறக்கத்தில் காணப்பட்டது.
முதலீடு செய்யணுமா?
எனினும் தற்போது அதானி குழும பங்குகள் பலவும் மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருந்தாலும், ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு நிலையற்ற ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் எஸ்பிஐ தரமான ஒரு பங்காக இருந்தாலும், இதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
விலை அதிகரிக்கலாம்
இது குறித்து பங்கு சந்தை நிபுணர்கள், பண்டமெண்டல் மற்றும் டெக்னிக்கல் ரீதியாகவும் எஸ்பிஐ பங்கு விலையானது நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கின்றனர். இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை எதிர்பார்ப்பு
மூன்றாவது காலாண்டில் டெபாசிட் வளர்ச்சியானது குறைவாக உள்ளது. எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் எஸ்பிஐ-யின் வளர்ச்சி என்பது சாதகமான வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் இப்பங்கினை அதிகரிக்கலாம் என மதிப்பிட்டுள்ளார். இதன் விலையானது 730 ரூபாய் வரையில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தற்போதைய லெவல்?
எஸ்பிஐ பங்கு விலையானது தற்போது சுமார் 545 ரூபாய் என்ற லெவலை என்.எஸ்.இ-யில் எட்டியுள்ளது. இது நீண்டகால நோக்கில் 35% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் இப்பங்கின் விலையானது கடந்த டிசம்பர் காலாண்டில் நல்ல லாபத்தினை கண்டுள்ளது. இது எதிர்பார்ப்பினையும் உடைத்து காட்டியுள்ளது.
நிகரலாபம்
இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 62% அதிகரித்து, 15,477 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 14,205 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகரலாபம் 68% அதிகரித்து, 14,205 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8431.9 கோடி ரூபாயாக இருந்தது.
வட்டி வருவாய்
இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது 24% அதிகரித்து, 38,069 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை நிபுணர்கள் 36,948 கோடி ரூபாயாக இருந்தது. இது அதன் கடன் புத்தகத்திலும் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது.
எஸ்பிஐ கடன்
அதானி குழுமத்திற்கு எஸ்பிஐயின் மொத்த கடன் 0.90% ஆக உள்ளது. ஆக இதனால் பெரியளவில் பிரச்சனை இல்லை. எனினும் அதானி குழுமத்திற்கு ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு எதிராக தன்னை நிலை நிறுத்தாவிட்டால், 9 - 10 மாதங்களில் கடனை மீட்க வேண்டிய நிலை வரும் என்றும் எச்சரித்துள்ளது.
எல்ஐசி
எஸ்பிஐ மட்டும் அல்ல, எல்ஐசி பங்கிலும் ஏற்ற இறக்கம் என்பது சற்றே இருந்து வந்த நிலையில், இனி அந்த பங்குகளினை நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications