ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் சோலார் எனர்ஜி மற்றும் இபிசி தீர்வுகள் வழங்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஸ்மால்கேப் பங்கான ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் சமீபகாலமாக தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. 2024 ஜூனில் இப்பங்கின் விலை சாதனை உச்சத்தை தொட்டது. அது முதல் இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. குறிப்பாக இக்ரா மற்றும் கேர் ஆகிய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் கடன் மதிப்பீடுகளை குறைத்தது முதல் இப்பங்கின் விலை சரிவு தொடங்கியது.
அப்போது, ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் கடன் சேவை பதிவு தொடர்பாக பகிர்ந்த ஆவணங்கள் பொய்யானவை என இக்ரா குற்றம் சாட்டியது. மேலும், ஜென்சோல் நிறுவனத்தின் பணப்புழக்க நிலை மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியது. தாமதமான கடன் சேவை காரணமாக கேர் நிறுவனம் ஜென்சோல் நிறுவனத்தின் மதிப்பீட்டை குறைத்தது. அதேசமயம் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் அன்மோல் சிங் ஜக்கி, எந்த தவறும் செய்யவில்லை என்றும், குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு சுயாதீனக் குழுவை அமைப்பதாக அறிவித்தார்.

ஆனாலும் ஜென்சோல் பங்கின் விலை சரிவு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரி 21 முதல் இதுவரையிலான கடந்த 29 வர்த்தக தினங்களில் இப்பங்கின் விலை 2 முறை மட்டுமே உயர்ந்தது. கடந்த மார்ச் 19ம் தேதியன்று இப்பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்தது. அடுத்து கடந்த 3ம் தேதியன்று பங்கின் விலை 3 சதவீதம் உயர்ந்தது. பங்குகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பங்குகளை மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் (இஎஸ்எம் நிலை 1) கட்டமைப்பின்கீழ் வைக்க பந்குச்சந்தைகளை தூண்டியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் பங்கு விலை 5 சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட் அடித்தது. இந்நிலையில் இன்றும் இப்பங்கின் விலை 5 சதவீதம் சதவீதம் குறைந்து லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.147.55ஆக சரிந்தது. இப்பங்கின் விலை உச்சத்தை தொட்ட அடுத்த பத்து மாதங்களில் சுமார் 87 சதவீதம் தடாலடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.
2024 ஜூன் 24ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,125.75ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.147.55க்கு சரிந்தது. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி மீது வைத்த குற்றச்சாட்டால், அதானி குழும நிறுவன பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. இருப்பினும் பின்னர் அவை சரிவிலிருந்து மீண்டன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications