மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதியன்று 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக மத்திய அரசாங்கம் மத்திய பட்ஜெட்டில் தேசத்தின் உயிர் நாடியாக விளங்கும் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைக்கு முன்னுரிமை கொடுப்பது வாடிக்கையான ஒன்று.
வேளாண் துறை நாட்டின் 140 கோடி மக்களின் பசியை போக்கி வருகிறது.நம் நாட்டின் மொத்த பணியாளர்களில் 45 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் 3.5 லட்சம் டாலர் பொருளாதாரத்தில் வேளாண் துறை 15 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. இதனால் மத்திய அரசாங்கம் வேளாண் துறைக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும்.

கடந்த ஆண்டு தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ள 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான ஒதுக்கீட்டை 15 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான ஒதுக்கீடு ரூ.1.75 லட்சம் கோடியாக அதிகரி்க்கும்.
உள்நாட்டில் உணவு தானியங்கள் விநியோகத்தை அதிகரிப்பது மட்டுமல்ல மத்திய அரசின் நோக்கம். 2030ம் ஆண்டுக்குள் வேளாண் ஏற்றுமதியை தற்போதைய அளவான 5,000 கோடி டாலரிலிருந்து 8,000 கோடி டாலராக உயர்த்துவதற்கு போதுமான அளவு உபரியை உருவாக்கவும் மத்திய அரச முயற்சிகளை எடுத்து வருகிறது.
எதிர்வரும் பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்துடன் கூடிய விவசாய கடன்களுக்கான உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம். தற்போது ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சம் மட்டுமே மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கப்படுகிறது.
பயிர் காப்பீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகலாம். 2030ம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியை 3 கோடி டன்னாக உயர்த்தவும், அடுத்த 5 ஆண்டுகளில் மீன்வளத் துறையில் 900 கோடி டாலர்களை முதலீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2027ம் ஆண்டு வரை உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.10,900 கோடி ஊக்கத்தொகை வழங்கும் திட்டமும் இந்த பட்ஜெட்டில் அடங்கும். இவ்வாறு தெரிவித்தன.
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும் கூடுதல் நிதியை, அதிக மகசூல் தரும் விதை வகைகளை உருவாக்குதல், சேமிப்பு மற்றும் விநியோக உள்கட்டமைப்பை அதிகரித்தல், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக செலவிடப்படும் என கூறப்படுகிறது.
Story Written by: Subramanian
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications