மத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது
மத்திய அரசு நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது நாம் அறிந்த ஒன்றே. இந்நிலையில் நாட்டின் வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் அதிகளவிலான நிதி தேவையில் தற்போது மத்திய அரசு உள்ளது.
இந்த நிதி தேவையைத் தீர்க்கும் வகையில் 2016-17 பட்ஜெட் அறிக்கையில் அரசு செய்துள்ள பங்குகளைக் குறைக்கவும் புதிய அரசு நிறுவனங்களைப் பங்குச்சந்தகையில் பட்டியலிடவும் முடிவு செய்தது.
2% பங்குகள் விற்பனை
இதன்படி மத்திய அரசு ஐடிசி நிறுவனத்தில் செய்திருந்த முதலீட்டில் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு 6,700 கோடி ரூபாய் நிதியைத் திரட்டியுள்ளது.
எல்ஐசி நிறுவனம்
மத்திய அரசின் கையில் இருந்து ஐடிசி நிறுவனப் பங்குகளை யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் வாயிலாக எல்சிஎஸ் நிறுவனம் வாங்கிக்கொண்டது. ஒரு பங்கு 275.85 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடி விலை
மேலும் மத்திய அரசு, ஐடிசி நிறுவனத்தின் ஒரு பங்கை 0.15 பைசா குறைவாக விற்பனை செய்யுள்ளது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் இதன் மதிப்பு 276 ரூபாய்.
பங்குச்சந்தை
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.15 புள்ளிகள் உயர்ந்து 276.95 ரூபாய் வரை உயர்ந்தது.
45,500 கோடி ரூபாய்
மத்திய அரசு, பங்கு விற்பனையின் மூலம் சுமார் 45,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் திட்டத்தைத் தீட்டியுள்ளது. இத்திட்டத்தில் இதுவும் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
51 நிறுவனங்கள்
மத்திய அரசு இன்றைய நாள் வரை சுமார் 51 நிறுவனப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்துள்ளது. மேலும் தனது நிதி திரட்டும் திட்டத்தை 3 வருடத்திற்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications