சுரங்க தொழிலில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று தான் குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (ஜி.எம்.டி.சி.). குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயமும் அளித்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 143.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 203 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 2.10 சதவீதம் குறைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று ஜி.எம்.டி.சி. பங்கு விலை 52 வார புதிய உச்சமான ரூ.505.00ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை சரிய தொடங்கியது.
இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு செய்தியால் இப்பங்கின் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. குஜராத்தில் மின் தேவை கடுமையாக உயர்ந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் அம்மாநிலத்தில் உச்சகட்ட தேவை 24,544 மெகா வாட்டாக இருந்தது.
இது 2031-32ம் நிதியாண்டில் 36,000 மெகா வாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஜி.எம்.டி.சி. நிறுவனம் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அந்த மாநிலத்தில் லிக்னைட் சுரகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும், குஜராத்தில் உள்ள நிலக்கரி அடிப்படையிலான மற்றும் லிக்னைட் அடிப்படையிலான மின் நிலையங்களை மேம்படுத்த குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் (ஜி.யு.வி.என்.எல்.) நிறுவனத்துடன் ஜி.எம்.டி.சி. கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து இந்நிறுவன பங்கு ஏற்றம் காண தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஜி.எம்.டி.சி. பங்கின் விலை ரூ.399.25ல் முடிவுற்றது. இந்நிலையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை 0.46 சதவீதம் உயர்ந்து ரூ.401.10ல் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே பங்கு விலை ரூ.409.10 வரை உயர்ந்தது.
ஜி.எம்.டி.சி. நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் வலுவாக உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.2,462.88 கோடி ஈட்டியுள்ளது. மேலும், அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.613.59 கோடி ஈட்டியுள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் நிறுவனம் லாபமாக ரூ.204.12 கோடி ஈட்டியிருந்தது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.750.75 கோடியாக உயர்ந்தது. பொதுத்துறை நிறுவனங்களில் தொடர்ந்து நல்ல லாபம் மற்றும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஜி.எம்.டி.சி. நிறுவனமும் ஒன்று. மேலும் வருங்காலத்தில் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Story written by: Subramanian
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications