நெருங்கும் டெட் லைன்..!! செபியின் ஒரே வார்த்தைக்காக காத்திருக்கும் எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ்..!!

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கி எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட். இதனுடைய ஒரு பிரிவு அல்லது துணை நிறுவனம் எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ். இந்நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் 94.6 சதவீத பங்குகளை எச்டிஎஃப்சி வங்கி வைத்திருக்கிறது. 2025 செப்டம்பருக்குள் பெரிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று ரிசர்வ வங்கி உத்தரவிட்டு இருந்தது.

ஆவணங்கள்
இதனையடுத்து, எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டி்ல் களமிறங்க தேவையன நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் ஐபிஓ மேற்கொள்ள அனுமதி வேண்டிய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தது. செபி இந்நிறுவனத்தின் ஐபிஓ ஆவணங்களை பரிசீலனை செய்து வருகிறது.

நெருங்கும் டெட் லைன்..!!  செபியின் ஒரே வார்த்தைக்காக காத்திருக்கும் எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ்..!!

இந்த சூழ்நிலையில், எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் , செபியிடமிருந்து அதன் ஐபிஓவுக்கான அனுமதியை பெறுவதற்கு நெருக்கமாக உள்ளது. இன்னும் சில தினங்களில் எச்டிபி நிறுவனத்தின் ஐபிஓவுக்கு ஐபிஓவுக்கு செபி அனுமதி அளிக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் 150 கோடி டாலர் திரட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் மோட்டார்
எச்டிபி பைனான்ஸ் சர்வீசஸ் ஐபிஓ மூலம் 150 கோடி டாலர் திரட்டுவது, ஷேடோ வங்கிக்கு நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ ஆக இருக்கும். கடந்த ஆண்டு ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் திரட்டிய330 கோடி டாலர் மதிப்பிலான ஐபிஓவுக்கு பிறகு, அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய ஐபிஓவாக எச்டிபி பைனான்ஸ் சர்வீசஸின் ஐபிஓ இருக்கும். அடுத்த மாதம் வருங்கால முதலீட்டாளர்களுடன் ஈடுபடும் செயல்முறையை தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தென்கொரியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது இந்திய நிறுவனத்தின் ஐபிஓவை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்தியாவின் மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்காவின் பரஸ்பர வரியால் தூண்டப்பட்ட சந்தை கொந்தளிப்பு போன்ற காரணங்களால் அதன் ஐபிஓ பணிகளை தற்காலிக நிறுத்தி வைத்துள்ளது.

டாடா கேபிட்டல்
டாடா சன்ஸின் துணை நிறுவனம் டாடா கேபிட்டல். இந்நிறுவனம் ஒரு நிதி மற்றும் முதலீட்டு சேவை நிறுவனமாகும். டாடா கேபிட்டல் நிறுவனம் அண்மையில், 200 கோடி டாலர் மதிப்பிலான ஐபிஓ மேற்கொள்ள அனுமதி வேண்டி செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தது.

நிழல் வங்கி (ஷேடோ வங்கி) என்பது பாரம்பரிய வணிக வங்கிகளை போன்ற செயல்பாடுகளை செய்யும் வங்கி அல்லாத நிதி இடைத்தரகரை குறிக்கிறது. அவை ஒழுங்குமுறை மேற்பார்வைக்கு உட்பட்டவை அல்ல.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+