பங்குச் சந்தையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின் தனியார் துறை வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுத்து வருகின்றன. சமீபகாலமாக தனியார்துறை வங்கி பங்குகள் சற்று அழுத்தத்தில் உள்ளன. இருப்பினும், இந்தக் காலகட்டத்திலும் சில வங்கிப் பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தை அதிகரித்தன. எனவே, தற்போது சாதகமான ஏற்றத்தைக் காட்டி வரும் ஐந்து முக்கிய வங்கிகளின் பங்குகள், வரும் நாட்களில் 46 சதவீதம் வரை உயரும் அறிகுறிகள் தென்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதில் HDFC வங்கி மற்றும் நான்கு பெரிய தனியார் வங்கிகளின் பங்குகளும் அடங்கும்.
HDFC வங்கி
வரும் நாட்களில் ஹெச்டிஎப்சி வங்கியின் பங்கு விலை 46 சதவீதம் வரை உயரலாம் என 40 ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த பங்கு மீதான வாங்குதல் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். அதேபோல், கடந்த வாரத்தில் பங்கு விலை 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது பங்கின் விலை ரூ. 1,755-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 13.40 லட்சம் கோடியாக உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியாகும்.

இண்டஸ் இண்ட் வங்கி
42 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் 35.8 சதவீதம் வரை உயரும் என கணித்துள்ளனர். எனவே, இந்த பங்கிற்கும் வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு 7.2 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது ரூ. 1,468-ல் வர்த்தகமாகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.14 லட்சம் கோடியாக உள்ளது.
ஆக்சிஸ் வங்கி
39 ஆய்வாளர்கள், வரும் நாட்களில் ஆக்சிஸ் வங்கியின் பங்கு விலை 24.5 சதவீதம் உயரும் என கணித்துள்ளனர். இந்த பங்கிற்கும் வாங்கும் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு விலை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ரூ. 1,242-ல் வர்த்தகமாகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.84 லட்சம் கோடியாக உள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கி
37 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை 20.8 சதவீதம் உயரும் என கணித்துள்ளனர். வாங்குதல் மதிப்பீட்டை கொடுத்துள்ளனர். கடந்த மாதத்தில் பங்கு விலை 5.5 சதவீதம் அதிகரித்த பங்கு தற்போது ரூ. 1,922-ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3.82 கோடியாக உள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
39 ஆய்வாளர்கள் வரும் நாட்களில் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 20.3 சதவீதம் உயரும் என கணித்து வாங்கும் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் பங்கு விலை 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது ரூ. 1,318-ல் வர்த்தகமாகி வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 9.28 லட்சம் கோடியாக உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications