கொம்பன் இறங்கிட்டான்.. SML Isuzu பங்குகள் திடீர் சரிவு..!!

இந்தியாவில் கனரக வாகன உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் எஸ்எம்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% வரை குறைந்து லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமானது. மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவனம் இந்த நிறுவனத்தை கையகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு திங்கட்கிழமை அன்று சரிவை கண்டது.

மகேந்திரா & மகேந்திரா லிமிடெட் நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தின் 58.96 சதவீத பங்குகளை வாங்க இருக்கிறது. இதற்காக ஒரு பங்கிற்கு 650 ரூபாயை மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் வழங்க இருக்கிறது. இதன்படி 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இந்த பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக மகேந்திரா நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தின் பிரமோடரான சிமிட்டோமோ கார்ப்பரேஷன் வைத்திருக்கும் 43.96 சதவீத பங்குகளையும் முழுவதுமாக வாங்க இருக்கிறது. அதேபோல ஐசு மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் வைத்திருக்கும் 15 சதவீத பங்குகளையும் மொத்தமாக வாங்க இருக்கிறது.

கொம்பன் இறங்கிட்டான்..  SML Isuzu பங்குகள் திடீர் சரிவு..!!

இதன் மூலம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாடு முழுவதுமே மகேந்திரா& மகேந்திரா நிறுவனத்திடமே வர இருக்கிறது. இந்த பணிகள் முடிவடைந்த உடன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ உரிமையாளராக இது மாறி விடும். மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் தங்களுடைய லாரி மற்றும் பேருந்து சம்பந்தப்பட்ட தொழிலை விரிவாக்கம் செய்யும் பொருட்டு எஸ்எம்எல் நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது. இது தவிர எஸ்எமல் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் பங்குதாரர்களிடமிருந்து 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கும் தயாராக இருப்பதாக மகேந்திரா &மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து திங்கட்கிழமை அன்று எஸ்எம்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10% வரை சரிவடைந்து 1596 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. அதே வேளையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.3% உயர்ந்து ஒரு பங்கின் விலை 2900 என வர்த்தகமானது.

எஸ்எம்எல் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பதன் மூலம் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய லாரி மற்றும் பேருந்துகள் உற்பத்தி, விற்பனை சந்தையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் பிடி அதிகமாகும். தற்போது இந்தியாவில் இந்த பிரிவு ஆண்டுதோறும் ஆறு சதவீதம் வளர்ச்சியை கண்டு வருகிறது. 2031-ஆம் ஆண்டுக்குள் இது 12 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் தான் அசோக் லேலேண்ட் நிறுவனம் எஸ்எம்எல் நிறுவனத்தை வாங்க இருப்பதாக ஒரு தகவல் பரவியது .இந்த நிலையில் மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி இருக்கிறது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+