மும்பை: இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் கார்ப்பின் ஒரு பங்கின் மதிப்பானது ஓராண்டு காலத்தில் 100% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் பங்குகள் மேலும் 30 சதவீதம் வரை உயரக்கூடும் என உள்நாட்டு தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
அண்மையில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் வீடா வி1 ப்ரோ என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த மின்சார ஸ்கூட்டரின் பிரத்தியேக சலுகையாக வாடிக்கையாளர்கள் வாகனத்தை வாங்கிய பிறகு ஐந்தாண்டு காலத்திற்கு இலவசமாக சர்வீஸ் செய்து தரப்படும் என ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆப்டர் சேல்ஸ் பேக்கேஜ் என்பது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக அதிகரித்தன. 27ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் உயர்வு கண்டு ரூ. 4,631.90 என்ற அளவில் வர்த்தகமானது. இதனை அடுத்து ஷேர்கான் பங்கு நிறுவனம் ஹீரோ மோட்டார் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.
அண்மையில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய வாகனங்களின் விற்பனை மற்றும் மின்சார வாகன துறையில் இதன் விரிவாக்கம் ஆகியவை காரணமாக வளர்ச்சி என்பது பாசிட்டிவாக இருக்கிறது என ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிரிமியம் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டார் சந்தை பங்கு தொடர்ந்து அதிகரிக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை எட்டும் என ஷேர்கான் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் அதன் பிராண்ட், மாடல்கள் மற்றும் பிரீமியம் கடைகளில் அதிக கவனத்தை செலுத்துவதையும் ஷேர்கான் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது. ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை ரூ. 4631.90 என உயர்வு கண்டது. ஹீரோ மோட்டார் காப் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 93,000 கோடி என்ற நிலையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 100% மற்றும் கடந்த ஆறு மாத காலத்தில் 55% உயர்ந்துள்ளது.
ஹீரோ 2.0 கடைகள் மூலம் ஹீரோ மோட்டார் நிறுவனம் தங்களது டிஸ்ட்ரிபியூஷன் அமைப்பை மறுசீரமைத்துள்ளதால் நம்பிக்கையுடன் இந்த பங்குகளை வாங்கலாம் என்றும், ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது கூடிய விரைவில் ரூ. 6,057 என்ற அளவை எட்டும் என்றும் ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications