நமது தபால் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கு என பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு மாதம் தோறும் எவ்வளவு தொகை வட்டியாக கிடைக்கும் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே நமது வங்கிகளும் , தபால் நிலையங்களும் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதங்களுடன் சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. அப்படி நமது தபால் நிலையங்களில் கிடைக்க கூடிய ஒரு சூப்பரான திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.

இதில் ஒருமுறை முதலீடு செய்து விட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டித்தொகை உங்களது கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
மூத்த குடிமக்கள் திட்டத்தை பொறுத்தவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வட்டி வருவாய் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ஒரு திட்டம் இது. இந்த திட்டத்தில் தற்போதைக்கு ஆண்டுக்குஇ 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் 1,000 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய முடியும். 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், அரசு பணிகளில் ஓய்வு பெற்ற்றவர்களில் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஓய்வு பெற்ற பாதுகாப்புத்துறை ஊழியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை மார்ச் 31 ,ஜூன் 30, செப்டம்பர் 30 ,டிசம்பர் 31 ஆகிய ஆகிய தேதிகளில் வட்டி கணக்கீடு செய்யப்பட்டு கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முதிர்வு காலத்தை தாண்டி கூடுதலாக மூன்று ஆண்டுகளுக்கு கூட இந்த திட்டத்தை நாம் நீட்டித்துக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் 8.2% வட்டி கிடைக்கிறது, அந்த வகையில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு, ஒவ்வொரு காலாண்டுக்கும் 10,250 ரூபாய் வட்டியாக கிடைக்கும் ஓராண்டில் 41,000 ரூபாய் வட்டி கிடைக்கும். எனவே இவர்களுக்கு முதிர்வு தொகையாக 7,05,000 கிடைக்கும்.
10 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலண்டிற்கும் 20,500 ரூபாய் வட்டியாகவும் ,ஒரு ஆண்டுக்கு 82,000 ரூபாய் கிடைக்கும். முதிர்வு தொகையாக மொத்தமாக 14,10,000 ரூபாய் கிடைக்கிறது.
15 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் 30,750 ரூபாய் வட்டி கிடைக்கும். ஓராண்டில் 1,23,000 ரூபாய் வட்டியாக மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக முதிர்வு காலத்தில் இந்த திட்டத்தில் 21,15,000 ரூபாய் கிடைக்கும்.
20 லட்சம் ரூபாய் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு காலண்டுக்கும் 41,000 ரூபாயும், ஒரு ஆண்டில் 1,64,000 ரூபாய் வட்டியாகவும் கிடைக்கும். முதிர்வு காலத்தில் மொத்தமாக 28,20,000 ரூபாய் கிடைக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications