கடந்த வாரத்தில் சில முன்னணி நிறுவனங்கள் தங்களது சந்தை மூலதனத்தை அதிகப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு வாரமும், மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அவற்றில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் 4 பெரிய இந்திய நிறுவனங்கள் இணைந்து ரூ.81,151.31 கோடி சந்தை மதிப்பை அதிகரித்துள்ளது. இதில், ஐசிஐசிஐ வங்கியும், எச்டிஎஃப்சி வங்கியும் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இந்த காலகட்டத்தில், மும்பை பங்குச் சந்தை ஆனது 156.61 புள்ளிகள் சரிந்துள்ளது. டாப் 10 மதிப்புமிக்க நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் லாபத்தையும், 6 நிறுவனங்கள் நஷ்டத்தை பதிவு செய்துள்ளன.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சந்தை மூலதனத்தை அதிகரித்தன. அதே நேரத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) ஆகியவை இணைந்து ரூ.76,622.05 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளன.
இதற்கிடையில், கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி ரூ.28,495.14 கோடியைச் சேர்த்தது. அதன் சந்தை மூலதனம் ரூ.8,90,191.38 கோடியாக இருந்தது. எச்டிஎஃப்சி வங்கியின் மதிப்பு ரூ.23,579.11 கோடி அதிகரித்து ரூ.12,82,848.30 கோடியாக உள்ளது. எஸ்பிஐயின் சந்தை மதிப்பு ரூ.17,804.61 கோடி அதிகரித்து ரூ.7,31,773.56 கோடியாகவும், பார்தி ஏர்டெல் மதிப்பு ரூ.11,272.45 கோடி அதிகரித்து ரூ.9,71,707.61 கோடியாகவும் உள்ளது.
மறுபுறம், இன்ஃபோசிஸின் சந்தை மூலதனம் ரூ.23,314.31 கோடி குறைந்து, ரூ.7,80,126.10 கோடியாகக் குறைந்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு ரூ.16,645.39 கோடி குறைந்து ரூ.18,38,721.14 கோடியாக உள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டிசிஎஸ் ஆகியவை முறையே ரூ.15,248.85 கோடி மற்றும் ரூ.10,402.01 கோடி நஷ்டத்தை சந்தித்தன.
பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றம் காணப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224.75 ஆகவும், நிஃப்டி 104.21 புள்ளிகள் அதிகரித்து 24,854 ஆகவும் நிறைவடைந்தது. ஆனால், நிஃப்டியால் 25000 என்ற புள்ளியைத் தாண்ட முடியவில்லை. ஆனால், வங்கித் துறை மற்றும் உலோகத் துறைகளில் வளர்ச்சி பதிவாகியுள்ளது.
டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி மற்றும் எல்ஐசி ஆகியவற்றைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிக மதிப்புள்ள உள்நாட்டு நிறுவனமாகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications