ஒரே நாளில் 20% சரிந்த IDFC பங்கு மதிப்பு: காரணம் என்ன? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

IDFC ஃபர்ஸ்ட் வங்கியில் நடந்த ரூ.590 கோடி மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து, அதன் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ14,438 கோடி சரிந்தது. சண்டிகர் கிளையில் நிகழ்ந்த இந்த மோசடி குறித்த செய்தி வெளியானதும், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், வங்கியின் பங்குகள் 20% வரை வீழ்ச்சியடைந்தன. இது மார்ச் 2020க்குப் பிறகு ஏற்பட்ட மிக அதிகமான சரிவாகும்.

வங்கி ஊழியர்கள் ஹரியானா மாநில அரசுடன் தொடர்புடைய கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பணப் பரிமாற்றங்களைச் செய்து, சுமார் ரூ 590 கோடி வைப்புத்தொகை முரண்பாடுகளை உருவாக்கியதாகத் தெரியவந்தது. இந்த மோசடி தொகை வங்கியின் Q3 நிகர லாபமான ரூ 503 கோடியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 20% சரிந்த IDFC பங்கு மதிப்பு: காரணம் என்ன? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, யூபிஎஸ் (UBS) அறிக்கையின்படி, இந்தத் தொகை 2026 நிதியாண்டுக்கான நிகர லாபத்தில் சுமார் 22% ஆக இருக்கலாம். இருப்பினும், இதன் மூலதன தாக்கம் வங்கியின் நிகர மதிப்பில் 1% மட்டுமே இருக்கும் எனக் கணித்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி வரிக்கு முந்தைய லாபத்தில் சுமார் 20% பாதிப்பு ஏற்படும் என மதிப்பிட்டது. இன்வெஸ்டெக் (Investec) தனது 'வாங்க' (Buy) மதிப்பீட்டைத் தொடர்ந்தாலும், இலக்கு விலையை ரூ105 இலிருந்து ரூ 92 ஆகக் குறைத்தது.

நொமுராவின் அங்கித் பிஹானி, மோசடி செய்தவர்களின் கணக்கிலிருந்தும், பிற நிறுவனங்களிடமிருந்தும் இழப்பீடு பெறுவதன் மூலம் நிதித் தாக்கத்தைக் குறைக்கலாம் என்றார். வங்கியின் நிர்வாகம் மற்றும் கிளை அளவிலான கட்டுப்பாடுகள் குறித்த கவலைகளை சுட்டிக்காட்டி, நம்பகத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தடயவியல் கண்டுபிடிப்புகள் வரும் வரை பங்குகள் அழுத்தத்தில் இருக்கும் என்றும் அவர் கணித்தார்.

Also Read

இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்பைக் கட்டுப்படுத்த வங்கித் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வி. வைத்யநாதன் இந்த மோசடி ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும், உள் கூட்டு சதியாலேயே ஏற்பட்டதே தவிர, இது ஒரு முறையான தோல்வி அல்ல என்றும் அவர் விளக்கினார்.

"காசோலைகளை அனுமதிப்பது உள்ளிட்ட அத்தியாவசிய கட்டுப்பாடுகள் வங்கியில் உள்ளன," என்று வைத்யநாதன் தெரிவித்தார். "நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 1,000க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறோம்; இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை" என்றும் அவர் கூறினார்.

"இதில் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது ஒரு குறிப்பிட்ட கிளை மற்றும் ஒரு வாடிக்கையாளர் குழுவைச் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினை. இதில் அமைப்பு ரீதியான சிக்கல் இல்லை. வங்கி வலுவான மூலதனத்துடன் உள்ளதால், மோசடியின் நிதி தாக்கம் சமாளிக்கக்கூடியது," என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விவகாரம் முதன்முதலில் 2026 பிப்ரவரி 18 அன்று வெளிச்சத்திற்கு வந்தது. ஹரியானா அரசு நிறுவனங்கள் தங்கள் உண்மையான கணக்கு இருப்புக்கும், கணக்கு வைத்திருப்பவர்கள் கோரிய இருப்புக்கும் இடையே முரண்பாடுகளைக் கண்டறிந்தன. சண்டிகர் கிளையில் ஹரியானா அரசுடன் தொடர்புடைய குறிப்பிட்ட கணக்குகளில் மட்டுமே சிக்கல் இருப்பது ஒரு ஆரம்ப உள் மதிப்பாய்வில் உறுதி செய்யப்பட்டது.

Recommended For You

சந்தேகத்தின் பேரில் நான்கு கிளை அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, காவல்துறை புகார் பதிவு செய்யப்பட்டது. மேலும், சுதந்திரமான தடயவியல் தணிக்கையை நடத்த கேபிஎம்ஜி (KPMG) நியமிக்கப்பட்டது. மோசடி வழக்குகளைக் கண்காணிக்கும் சிறப்பு வாரியக் குழு பிப்ரவரி 20 அன்று கூடியது, அதைத் தொடர்ந்து பிப்ரவரி 21 அன்று முழு தணிக்கைக் குழு மற்றும் வாரியக் கூட்டம் நடைபெற்றது. மோசடி செய்தவர்களின் சந்தேகிக்கப்படும் கணக்குகளின் இருப்புகளை முடக்குமாறு (lien-mark) வங்கி பிற வங்கிகளுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.

ஹரியானா அரசு IDFC ஃபர்ஸ்ட் மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளை தனது பட்டியலில் இருந்து நீக்கி, மாநில அரசுத் துறைகள் இரு வங்கிகளுடனான தங்கள் கணக்குகளை மூடவும் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கை பொது நிதிகளைக் கையாளும் வங்கியின் திறன் மீது பரவலான நம்பிக்கையின்மையை சுட்டிக்காட்டுகிறது. இது வங்கியின் நிறுவன வணிகத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தி, எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+