ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்திய கார்ப்பரேட் உலகின் கிட்டத்தட்ட ஒரு சூப்பர்ஸ்டார் போன்ற நிறுவனமாகும், பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து டெலிகம்யூனிகேஷன்ஸ் வரை பல தொழில்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈடுபட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் டெலிகாம் சேவை பிரிவான ஜியோவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியது. இதன் மூலம் இந்திய டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. குறுகிய ஆண்டுகளுக்குள் தேசிய அளவில் ஜியோ மிகப் பெரிய டெலிகாம் கம்பெனியாக உருவெடுத்தது.

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு ஜியோ பங்கு விலை ரூ.539.36 ஆக இருந்தது. அப்போது ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் சுமார் 18 பங்குகளை வாங்கியிருக்கலாம். இப்போது அந்த பங்கின் விலை ரூ.2520 ஆக உள்ளது. எனவே உங்களிடம் இருக்கும் 18 பங்குகளின் விலை சுமார் ரூ.46,719.68 ஆக இருக்கும்.
கூடுதலாக உங்களுக்கு ஜியோ பைனான்சியல் சர்வீஸஸின் 18 பங்குகளும் கிடைத்திருக்கும். இப்போது தற்போதைய சந்தை விலை ஒரு பங்கு ரூ.250 என உள்ளது. 18 பங்குகளுக்கு ரூ.4400 கிடைத்திருக்கும்.
பரவலான 4ஜி நெட்வொர்க் கவரேஜ், சலுகை கட்டணம் ஆகியவற்றுடன் டெலிகாம் துறையில் ஜியோ காலடி வைத்தபோது பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பல பங்குகளின் விலையும் உயர்ந்தன. குறுகிய காலத்துக்குள்ளேயே ஜியோ மிகப்பெரிய டெலிகாம் ஆப்பரேட்டராக மாறிவிட்டது.
இப்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது பைனான்சியல் சர்வீஸ் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் ரூ.265இல் மும்பை பங்குச்சந்தையிலும் ரூ.262 தேசிய பங்குச் சந்தையிலும் தொடங்கியது. ஆனால் 5 சதவீதம் மதிப்பு குறைந்து ரூ.248.9க்கு குறைந்தது. இன்றும் 5 சதவீத சரிவில் தான் உள்ளது.
ரிலையன்ஸ் பைனான்சியல் சர்வீஸஸ் பங்கு பட்டியலிடப்பட்டபோது ரூ.1.68 லட்சம் கோடி வரப்பெற்றது. இந்தியாவில் 33ஆவது விலை மதிப்புள்ள நிறுவனம் என்றும் என்பிஎப்சியில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. இது பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வுக்குப் பின்னால் ஆகும்.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications