நாடாளுமன்றத்தில் நாளை காலை சாியாக 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் எந்த பங்குகளை வாங்கலாம் என்று கடுமையாக யோசனை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பட்ஜெட்டுக்கு முன்னதாக எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து நிபுணர்கள் தங்களது பரிந்துரை தெரிவித்துள்ளனர்.
ஈக்வினோமிக்ஸ் ரிசர்ச்சின் நிறுவனர் ஜி சொக்கலிங்கம் கூறுகையில், முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர மூலதன பங்குகளில் கவனம் செலுத்தலாம். பட்ஜெட்டுக்கு பிறகு பங்கு சந்தை சரிந்தால், முதலீட்டாளர்கள் தரமான சிறிய மற்றும் நடுத்தர மூலதன பங்குகளை வாங்குவதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்யும் பங்குகளை வாங்க வேண்டும். சந்தை ஏற்றம் கண்டால், உங்கள் போர்ட்போலியாவில் 70 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மூலதனத்தில் 30 சதவீதத்தை மட்டுமே பெரிய பங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், பட்ஜெட்டின் தாக்க் குறுகிய காலமாக இருக்கும். பொதுவாக சில நாட்கள் மட்டுமே அது நீடிக்கும். தனிநபர் வருமான வரி குறைப்பு போன்ற வளர்ச்சி தூண்டும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிமுகம் செய்தால், ஒரு ஏற்றம் வாய்ப்புள்ளது.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் ஆகியவையே நடுத்தர, நீண்ட கால சந்தை போக்கில் ஆதிக்கம் செலுத்தும். தற்போதைய சூழலில், தரமான பெரிய நிதி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான துறையாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
2025 பட்ஜெட், மூலதன செலவினங்கள், வீட்டு வருமான உயர்வு, மறைமுக வரி எளிமைப்படுத்துதல் மற்றும் நிதி விவேகம் ஆகியவற்றில் மத்திய பட்ஜெட் கவனம் செலுத்தும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், பட்ஜெட்டுக்கு முன்னதாக சில பங்குகளை வாங்குவது ஆதாயம் அளிப்பதாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், பட்ஜெட்டுக்கு முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எல் அண்ட் டி,எச்சிஎல் டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிரெண்ட், பார்தி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, சன் பார்மா மற்றும் டிக்சான் டெக் போன்ற பெரிய பங்குகளையும், இந்தியன் ஹொட்டல்ஸ், கம்மின்ஸ் இந்தியா, பிஎஸ்இ, கோத்ரெஜ் பிராபர்டீஸ், கோஃபோர்ஜ், மெட்ரோ பிராண்ட்ஸ், ஐபிசிஏ லேப்ஸ்,ஏஞ்சல் ஒன்,வினாட்டி ஆர்கானிக்ஸ் மற்றும் ஜேஎஸ்டபுள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என அந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications