சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

உலக அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியில் உள்ளன. முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். இந்த சூழலில் முதலீட்டாளர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் (SEBI) தலைவர் துஹின் காந்தா பாண்டே அறிவுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாண்டே, தற்போதைய உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையால் சூழப்பட்டுள்ளது என்றார். எனினும், பெரிய இடையூறுகளுக்குப் பிறகு சந்தைகள் நிலைப்பெறும் என்பதையே வரலாறு நமக்கு காட்டுகிறது என கூறிய அவர், இன்றைய சூழலில் நிதி சந்தைகள் நிலையற்ற தன்மையில் உள்ளன என குறிப்பிட்டார். “புவிசார் அரசியல் பதற்றங்கள் பொருளாதார உறவுகளை வடிவமைக்கின்றன. மத்திய கிழக்கின் மோதல்கள் எரிசக்தி விநியோகத்தை வெகுவாக சீர்குலைத்துள்ளன. தவிர்க்க முடியாமல், மூலதனச் சந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் எடுத்துரைத்தார்.

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

நவீன காலத்தில் தகவல்கள் விரைவாகப் பரவுவதால், எந்தவொரு அதிர்ச்சியும் உலகப் பொருளாதாரங்கள் முழுவதும் மிக விரைவாகப் பரவுகிறது. இதனால் குறுகிய கால ஏற்ற இறக்கங்களுக்கு சில்லறை முதலீட்டாளர்கள் அவசரமாக எதிர்வினையாற்ற வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். “சில்லறை முதலீட்டாளர்களுக்கு, பொறுமையாக இருப்பதே சிறந்த உத்தி,” என்று பாண்டே அறிவுறுத்தினார்.

இதெல்லாம் நிதிச் சந்தைகளுக்கு புதிதல்ல என்றும், உலகளாவிய பெரும் இடையூறுகளுக்குப் பிறகு சந்தைகள் எப்போதும் மீண்டு வந்துள்ளன என்பதையும் வரலாற்றின் வழி அவர் தெளிவுபடுத்தினார். “இது நிரந்தரமானது அல்ல,” என்று அவர் வலியுறுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதல் போன்ற கடந்தகால சம்பவங்களை எடுத்துக்காட்டிய பாண்டே, சந்தைகள் ஆரம்பத்தில் கலக்கமடைந்தாலும், இறுதியில் நிலைபெற்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Also Read

உலகளாவிய அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவினாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மூலதனச் சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று பாண்டே கூறினார். நாட்டின் சந்தை சூழல் முன்பை விடவும் விரிவடைந்து, அதிக நெகிழ்வுத்தன்மையைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

2015 நிதியாண்டு (FY15) முதல், இந்தியாவின் ஒட்டுமொத்த சந்தைகள் CAGR அளவீட்டில் சுமார் 15 சதவீதம் என்ற அளவில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன என்றும், அதே சமயம் கார்ப்பரேட் பத்திரச் சந்தை சுமார் 12 சதவீதம் CAGRல் வளர்ச்சி கண்டுள்ளது என்றும் பாண்டே சுட்டிக்காட்டினார்.

மேலும், பரஸ்பர நிதித் துறையின் கீழ் உள்ள சொத்து மேலாண்மையானது 20 சதவீதத்திற்கும் அதிகமான CAGRல் விரிவடைந்து, சிறு மற்றும் பெரு முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் பங்களிப்பையும் சந்தை மீதான அவர்களின் நம்பிக்கையையும் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+