சமீபத்திய மாதங்களாகவே தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவிலேயே இருந்து வருகின்றது. இது அவ்வப்போது சற்று ஏற்றம் கண்டாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தொடர்ந்து 74 ரூபாய்க்கு மேலாக இருந்து வருகின்றது.

இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 பைசா அதிகரித்து 74.48 ரூபாயாக அதிகரித்து தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.57 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான டேட்டா இன்று வெளியாகவிருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பானது சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
அதோடு இந்திய பங்கு சந்தையிலும் வாங்குவது அதிகரித்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பானது ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 376.41 புள்ளிகள் அதிகரித்து, 52,749 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 109.15 புள்ளிகள் அதிகரித்து, 15,801 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்க சந்தைகள் தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் வரலாற்று உச்சத்தில் காணப்பட்டன. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது.
எப்படியிருப்பினும் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது ரூபாயின் சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய ரூபாயின் இந்த மோசமான சரிவுக்கு, இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்து வருவதும் ஒரு காரணம். இது இந்தியாவின் வர்த்தக சம நிலையை பாதிக்கலாம் என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு பி.எல்.சியின் பருல் மிட்டல் சின்ஹா கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு மற்றும் ஆர்பிஎல் பாங்க் லிமிடெட் ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் 76 ரூபாயினை தொடலாம் என்றும் கணித்துள்ளனர். இதே டாய்ச் வங்கியானது 75 ரூபாயாக கணித்திருந்தது. இதற்கிடையில் தற்போது ரூபாயின் மதிப்பானது கிட்டதட்ட 74.47 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications