மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன. அமெரிக்கா-ஈரான் போர் தீவிரமடையும் நிலையில், பங்குச்சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் இழந்தனர்.

மேற்கு ஆசியப் போர் கச்சா எண்ணெய் விலைகளை கணிசமாக உயர்த்தியுள்ளன. இது புதிய பணவீக்க அச்சங்களை எழுப்பியுள்ளது. இந்த அழுத்தம் காரணமாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவை வட்டி விகிதங்களைக் குறைக்கும் எதிர்பார்ப்புகளுக்குப் பெரும் அடியாக அமைந்தது. ரூ457 லட்சம் கோடியாக இருந்த பி.எஸ்.-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், புதன்கிழமை காலை ரூ448 லட்சம் கோடியாகக் குறைந்தது. பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு பின்வரும் அமெரிக்கா-ஈரான் போர், ரூபாயின் சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவையே முக்கிய காரணம்.

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!!  சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!!

அமெரிக்கா - ஈரான் போர் பதட்டங்கள் : ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி படுகொலைக்குப் பின், ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் பதட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. மேற்கு ஆசியாவில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை டெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் புதிய தாக்குதல்களை நடத்தியதாகக் கூறியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தப் போர் அடுத்த நான்கு அல்லது ஐந்து வாரங்களில் முடிவடையும் எனக் கூறினார். இருப்பினும், "அதற்கும் மேலாகத் தொடரவும் நான் தயாராக உள்ளேன்" என்றும் திங்கட்கிழமை அவர் தெரிவித்தார்.

போர் தீவிரமடைந்து கச்சா எண்ணெய் விலை உயர்வதால், சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. “இந்த மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும், என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என யாருக்கும் தெரியாது,” என ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ரூபாயின் சரிவு: இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு எதிராக 66 பைசா குறைந்து 92.15 என்ற வரலாறு காணாத குறைந்தபட்ச அளவை எட்டியது. அமெரிக்கா-ஈரான் போரினால் பணவீக்க அபாயத்திற்கு மத்தியில் டாலர் குறியீடு பல மாத உச்சத்திற்கு உயர்ந்தது இந்தப் பின்னடைவுக்குக் காரணம். பலவீனமான ரூபாய், இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு மூலதன வெளியேற்றத்தை விரைவுபடுத்தும். இது உயர்வான உள்ளீட்டுச் செலவுகளால் நிறுவனங்களின் லாபத்தை குறைக்கும்.

எல்.கே.பி. செக்யூரிட்டிஸின் ஆராய்ச்சி ஆய்வாளர் ஜதீன் திரிவேதியின் கணிப்புப்படி, கச்சா எண்ணெய் விலை நகர்வுகளும் புவிசார் அரசியல் நிகழ்வுகளுமே ரூபாயின் முக்கிய இயக்கிகள். குறுகிய காலத்தில், ரூபாய் 91.00–92.00 வரம்பிற்குள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்கிறார்.

கச்சா எண்ணெய் : அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் சரக்கு போக்குவரத்தைப் பாதித்ததால், பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $82க்கு மேலும், WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு $75க்கு மேலும் வர்த்தகமாகின்றன. இது சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்தி, பணவீக்கத்திற்கு மேலும் தூண்டுதலாக அமைகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+