ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியலாம்.. ஏன் தெரியுமா.. நிபுணர்கள் சொல்லும் காரணத்த பாருங்க!

சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது மெதுவான வேகத்தினை எட்டி வருகின்றது. இதற்கிடையில் கடந்த மாதமே இந்திய ரூபாயின் மதிப்பானது வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டது.

எனினும் கடந்த சில வாரங்களாகவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ள ரூபாயின் மதிப்பானது, இந்த வார முடிவில் 80 ரூபாய்க்கு அருகில் காணப்பட்டது.

இது தொடர்ச்சியான இந்தியாவில் அன்னிய முதலீடுகளின் வரத்தானது அதிகரித்து வரும் நிலையில், அது பங்கு சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இணையத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். இதில்கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

இதையடுத்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பாவனி சங்கர், சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ்

தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ்

தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியா பாவனி சங்கரை பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்து விட்டதாம். ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் போதும் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு , பேரம் பேசாமல் புன் சிரிப்போடு வாங்கிக் கொள்வதால், பிரியா பவானி சங்கர் பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.

கனவு நினைவானது

கனவு நினைவானது

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதவில்,18 வயது இருக்கும் பொழுது நாங்கள் கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் எங்களின் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

பீச் ஓரத்தில் புது வீடு

பீச் ஓரத்தில் புது வீடு

தற்போது அந்தக் கனவு நினைவாகி உள்ளது, நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்தப் பதிவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் இந்த காதல்ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு ஆதரவாக அமையலாம்

இந்தியாவுக்கு ஆதரவாக அமையலாம்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு மந்த நிலையில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் பத்திர சந்தையும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இதுவும் இந்திய சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் வாரத்தில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது, 81.50 ரூபாயாக சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 80.50 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

இந்திய ரூபாயின் மதிப்பானது 81.31 ரூபாயாக கடந்த வெள்ளிக்கிழமையன்று சரிவினைக் கண்டது. இது கடந்த அமர்வில் ஒரு டாலருக்கு 81.20 ஆகவும் இருந்தது. எப்படியிருப்பினும் ஒட்டுமொத்த பெர்பார்மன்ஸ் என்பது 0.5% ஆகவும், ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சரிந்து வரும் பத்திர சந்தை, டாலரின் காரணமாக, அமெரிக்கா பங்கு சந்தையானது சரிவினைக் கண்டு வந்தது.

மோசமான சரிவில் கரன்சிகள்

மோசமான சரிவில் கரன்சிகள்

இருப்பினும் நடப்பு வாரத்தில் ரூபாயின் மதிப்பானது உச்சம் தொட்டது. அமெரிக்க டாலருக்கு எதிராக 1.5% என்ற அளவுக்கு உச்சம் தொட்டது. இது சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு , யுவான் மதிப்பு, மலேசியா ரிங்கிட் மற்றும் சிங்கப்பூர் டாலர் போன்ற கரன்சிகள், இந்திய ரூபாயினை விட மோசமான சரிவில் காணப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

ஐசிஐசிஐ டேரக்டின் அறிக்கையின் படி, ரூபாயின் மதிப்பானது மதிப்பு அதிகரித்து 81 ரூபாய் என்ற லெவலை எட்டியது. டாலரின் மதிப்பானது அதன் முக்கிய லெவலான 105 என்ற லெவலை எட்டியது. இதற்கிடையில் வரவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தின் போது விகித உயர்வு என்பது மெதுவாக வேகத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீடு அதிகரிக்கலாம்

அன்னிய முதலீடு அதிகரிக்கலாம்

இதற்கிடையில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அன்னிய முதலீடானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் வாரத்திலும் ரூபாய்க்கு ஆதரவாக அமையலாம்.

இதற்கிடையில் அன்னிய செலவாணி கையிருப்பானது தொடர்ந்து மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவ,பர் 25 உடன் முடிவடைந்த வாரத்தில் 2.89 பில்லியன் டாலர் அதிகரித்து, 550.14 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 547.25 பில்லியன் டாலராக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+