அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வியாழக்கிழமை அன்று புதிய சரிவை எட்டியது. இது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா மீது அமெரிக்க வரிகள் ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டு இதுவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் இருந்து நிகர $11.7 பில்லியனை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.44 ரூபாயாக குறைந்துள்ளது, இது கடந்த வெள்ளியன்று பதிவு செய்யப்பட்ட 88.36 என்ற முந்தைய குறைந்தபட்ச அளவை விட அதிகம்.

அமெரிக்காவின் அதிகப்படியான வரிகள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்புகளைப் பாதித்து, ரூபாயின் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நுகர்வினை உயர்த்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தை அறிவித்துள்ளார். இரு நாடுகளும் வர்த்தக தடைகளை சரிசெய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்திய பொருட்களுக்கான 50% வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்களில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் இறக்குமதியாளர்கள் அதிக அளவில் ஹெட்ஜிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது நாணய சந்தையில் தேவை-விநியோக சமநிலையை சீர்குலைக்கிறது.
இதற்கிடையே ரிசர்வ் வங்கி ரூபாயின் வீழ்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்தை பங்கேற்பாளர்கள், மத்திய வங்கி டாலர்களை விற்று, ஏற்ற இறக்கங்களை சீர்செய்து, பெரிய மாற்றங்களைத் தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர். இந்த தலையீடுகள் எந்த ஒரு குறிப்பிட்ட அளவையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, ஆனால் வீழ்ச்சியை "கட்டுப்படுத்தப்பட்டதாக" வைத்து, நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பதட்டத்தைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளால் பெரும்பாலான பிராந்திய நாணயங்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில், ரூபாயின் பலவீனம் வேறுபடுகிறது. IFA குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO அபிஷேக் கோயங்கா, அமெரிக்க வரிகள் காரணமாக ரூபாயின் குறுகிய கால பலவீனம் தொடர வாய்ப்புள்ளது என்று கூறினார்.அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஹெட்ஜிங் செய்யாமல் இருக்க, வணிக வாய்ப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
இப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள துறைகளுக்கு தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக டாலரை பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கும் நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்திக்க உள்ளன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications