மும்பை: தற்போது உலகமே உற்று நோக்கிக் கொண்டிருப்பது இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து தான். இன்னும் ஒரு நாளில் அடுத்ததாக இந்தியாவை ஆளப்போவது யார் என்பது தெரியவர இருக்கிறது.
இது நமது பங்குச்சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனிடையே தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தையில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து கார்னேலியன் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் விகாஷ் கேமானி எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கள் காரணமாக நமது இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி காணப்பட்டு வருகின்றன. மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்தல் முடிவும் முடிவு வெளிவரும் நாளும் நெருங்கி விட்டது.
இந்த நிலையில் தேர்தல் நாளுக்குப் பிறகு ஒன்று இரண்டு நாட்களிலேயே இந்திய பங்குச் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பவிடும் என விகாஷ் கேமானி கணித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த நாளிலும் அதற்கு அடுத்து ஒன்று இரண்டு நாட்களிலும் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கும். இது ஒரு குறுகிய காலத்திற்கான தாக்கமாக மட்டுமே இருக்கும்.
நீண்ட காலத்திற்கு இதனை நாம் எதிர்பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். இரண்டு நாட்களிலேயே இந்திய பங்குச்சந்தை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்து விட்டது, ஆனால் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான வெற்றியைப் பெறவில்லை என்ற போது பங்குச்சந்தையில் எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க தேவையில்லை என கூறியுள்ளார் .
உணர்வுபூர்வமான எதிர்வினைகள் பங்குச்சந்தையில் இருக்கக்கூடும் ஆனால் அது குறுகிய காலத்திற்கு தான் இருக்குமே தவிர நீண்ட காலத்திற்காக இருக்காது என தெரிவித்துள்ளார்.
பாரதி ஜனதா பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் சில தயக்கங்களை வெளிப்படுத்த கூடும். ஆனால் எப்படி இருந்தாலும் இது பங்குச்சந்தையில் பெரிய மாற்றத்தை விளைவிக்காது என்றார்.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்கிற சூழல் ஏற்படும்போது பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது என்பது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வருவதாக அவர் கூறியுள்ளார்.
அரசு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயரும் என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் வந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை மதிப்பு உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில நிறுவனங்களின் பங்குகள் திருத்தத்திற்கு உள்ளாக கூடும் என்ற எச்சரிக்கையும் அவர் முன் வைத்துள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் ரூ.2000 செய்ய போகும் மேஜிக்!! பெண்கள் நினைச்சா எதுவும் நடக்கும்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications