திடீரென உயரும் ஸ்டீல் நிறுவன பங்குகள்.. என்ன காரணம்..? இப்போது முதலீடு செய்யலாமா?

இந்திய பங்குச்சந்தையில் ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. புதன்கிழமை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், ஜே.எஸ்.பி.எல், செயில் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 6% வரை உயர்ந்துள்ளன.

உலகளவில் ஸ்டீல் உற்பத்தி மற்றும் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். சீனா தனது ஸ்டீல் உற்பத்தியைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஸ்டீல் விலைகள் சரிவிலிருந்து மீண்டு வந்திருப்பது, மற்றும் குறைந்த உற்பத்திச் செலவுகள் ஆகியவை இந்த ஏற்றத்திற்கு காரணமாகியுள்ளன. குறிப்பாக, டாலரின் மதிப்பு குறைவது இந்திய ஸ்டீல் ஏற்றுமதிக்கு சாதகமாகியுள்ளது. மேலும் சீனாவில் உற்பத்தி குறைப்பு பற்றிய செய்திகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

திடீரென உயரும் ஸ்டீல் நிறுவன பங்குகள்.. என்ன காரணம்..? இப்போது முதலீடு செய்யலாமா?

இன்று பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் ஒரு பங்கு 167 ரூபாய்க்கும், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் பங்கு 1074 ரூபாய்க்கும், ஜே.எஸ்.பி.எல் பங்கு மதிப்பு 1028 ரூபாய்க்கும், செயில் பங்கு 129 ரூபாய்க்கும் என வர்த்தகமானது. உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி மற்றும் நுகர்வோரான சீனா, 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் உற்பத்தியைக் குறைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது. இதனால் சர்வதேச ஸ்டீல் சந்தையில் விநியோகம் சீரடைந்து, மாதக்கணக்கில் சரிந்துவந்த ஸ்டீல் விலைகள் உயரக்கூடும். இந்தியாவிற்குள் குறைந்த விலையில் ஸ்டீல் இறக்குமதி செய்யப்படுவது குறையும் என்பதால், உள்நாட்டு ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.

டாலரின் மதிப்பு குறைவதும் ஸ்டீல் நிறுவன பங்குகளின் ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. பொனான்சா நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அனுபம் சங்கல் கூறுகையில், டாலர் பலவீனமடையும்போது, சர்வதேச வாடிக்கையாளர்கள் ஒரு டாலருக்கு அதிக யூனிட்களை வாங்க முடியும். இது இந்திய ஸ்டீல் உற்பத்தியாளர்களுக்கு பாசிடிவாக அமைந்துள்ளது என்கிறார்.

கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் தகவல்படி, உள்நாட்டு ஸ்டீல் தேவை வலுவாக உள்ளது. ஜூலை 2025-இல் 7.4% ஆண்டு வளர்ச்சி பதிவாகியுள்ளது. FY26 முதல் காலாண்டில் 7.8% வளர்ச்சி ஏற்பட்டது. வணிகத் தடைகள் இறக்குமதியை 40% குறைத்துள்ளன. அதே சமயம், ஏற்றுமதி 8% அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா மீண்டும் நிகர ஸ்டீல் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

சமீபத்தில், DGTR (வர்த்தகத் தடைகள் மற்றும் நிவாரண இயக்குநரகம்) பாதுகாப்பு வரியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பரிந்துரைத்துள்ளது. இது நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்திய ஸ்டீல் துறைக்கு மேலும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்கும். பாதுகாப்பு வரி தொடர்ந்தால், FY2027-28-க்கான EBITDA மதிப்பீட்டில் 3-5% வளர்ச்சி இருக்கும் என கோடக் நிறுவனம் கணித்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+