நல்ல காலம் பொறக்குது!! 2 நாட்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!! முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்!!

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்தது மற்றும் ஜனவரியில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற உலகளாவிய எதிர்பார்ப்புகள் காரணமாக, இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 600 புள்ளிகள் உயர்ந்து, ஒரு கட்டத்தில் 85,510 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. அதேவேளையில், நிஃப்டி 50 குறியீடு 26,158 புள்ளிகளை மீண்டும் பெற்றது. இதன் மூலம், கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் மட்டும், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு கண்டது.

முன்னணி குறியீடுகள் மட்டுமின்றி, மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் நிவனங்களின் குறியீடுகளும் 1% வரை வளர்ச்சியைப் பதிவு செய்தன. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம், வியாழக்கிழமை ரூ466 லட்சம் கோடியில் இருந்து கிட்டதட்ட ரூ 475 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதன் வாயிலாக, முதலீட்டாளர்கள் இரண்டு அமர்வுகளில் மட்டுமே ரூ9 லட்சம் கோடி செல்வம் ஈட்டியுள்ளனர். இந்திய பங்குச் சந்தையின் இந்த தொடர்ச்சியான உயர்விற்குப் பின்னால் ஐந்து முக்கியக் காரணிகள் உள்ளன. அவை இந்திய சந்தை உணர்வை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தக் காரணிகளை விரிவாகப் புரிந்துகொள்வது சந்தையின் அடுத்த நகர்வைப் பற்றி அறிய உதவும்.

நல்ல காலம் பொறக்குது!! 2 நாட்களில் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரூபாயின் மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை: திங்கட்கிழமை முன்நேர வர்த்தகத்தில், வெளிநாட்டு நிதி வரத்துகளின் ஆதரவுடன், இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 22 பைசா அதிகரித்து 89.45 ஆக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) உள்நாட்டு நாணயத்தை ஆதரிக்கும் வகையில் டாலர்களை அதிகம் விற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, அதிக அளவிலான வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 91 என்ற சாதனையை மீறி, மிகக் குறைந்த மதிப்புக்கு சரிந்தது. ரூபாயின் ஆரோக்கியம் மேம்பட்டது ஒட்டுமொத்த சந்தை உணர்வை கணிசமாக உயர்த்தியுள்ளது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் (FII) : அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) கடந்த மூன்று தொடர்ச்சியான அமர்வுகளில் இந்தியப் பங்குகளை ரொக்கப் பிரிவில் வாங்கி வருகின்றனர். டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை அன்று அவர்கள் ரூ 1,830.89 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை வாங்கினர். இந்த மூன்று அமர்வுகளில் ஒட்டுமொத்தமாக, கிட்டத்தட்ட ரூ 3,600 கோடியை முதலீடு செய்துள்ளனர்.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு உத்தி வல்லுநரான வி.கே.விஜயகுமார் கூறுகையில், "இந்த ஏற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய இரண்டு முக்கியக் காரணிகள், ரூபாயின் தீவிர மீட்சி மற்றும் ரொக்க சந்தையில் FII-கள் வாங்குபவர்களாக மாறியதுதான். இந்த இரண்டு காரணிகளும் ஒன்றையொன்று வலுப்படுத்தி, சந்தையில் குறுகிய கால கவரிங்கைத் தூண்டி, பெஞ்ச்மார்க் குறியீடுகளை மேலும் உயரச் செய்யும்," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், "நாட்டின் சாதகமான பொருளாதார அமைப்பு மற்றும் வருவாய் வளர்ச்சியில் சாத்தியமான ஏற்றம் சந்தை முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆதரவை வழங்க முடியும். இருப்பினும், அதிக மதிப்பீடுகள் இந்த ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும்," என்றார் விஜயகுமார்.

சாதகமான உலகளாவிய சமிக்ஞைகள்: உலகளாவிய சந்தைகளில் இருந்து வந்த நேர்மறையான சமிக்ஞைகள் உள்நாட்டு சந்தையின் உணர்வுக்கு வலுசேர்த்தன. நாஸ்டாக் மற்றும் S&P 500 குறியீடுகளில் ஒரே இரவில் ஏற்பட்ட 1% வரை ஏற்றம், ஆசிய சந்தைகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜப்பானின் நிக்கே மற்றும் கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் 2% உயர்ந்தன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் காரணமாக உலகளாவிய சந்தைகள் உயர்ந்து வருகின்றன. அதே சமயம், பலவீனமான அமெரிக்க டாலரும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் முதலீட்டு உணர்வை வலுப்படுத்தி வருகிறது.

ரஷ்யா-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தைகள்: ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் ஞாயிற்றுக்கிழமை அன்று, ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுடன் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் பயனுள்ளவையாக இருந்ததாகக் கூறினார். இது கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு ஒரு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தொழில்நுட்ப காரணிகள்: ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கருத்துப்படி, அன்றைய தினத்திற்கான போக்கு தீர்மானிக்கும் நிலை 25,947 ஆக உள்ளது. நிஃப்டி இந்த நிலைக்கு மேலே வர்த்தகம் செய்தால், அது மேலும் 26,013-26,060-26,126 நிலைகள் வரை உயரக்கூடும். இருப்பினும், 25,947 க்கு கீழே வர்த்தகம் செய்தால், சில லாப நோக்கு பதிவு செய்யப்படலாம். இது குறியீட்டை 25,900-25,834-25,787 நிலைகளுக்கு இழுக்கக்கூடும்.

சாய்ஸ் ஈக்விட்டி ப்ரோக்கிங்கின் தொழில்நுட்ப ஆய்வு நிபுணர் ஆகாஷ் ஷா, நிஃப்டி 50 தொடர்ந்து முக்கியமான 25,800–26,850 ஆதரவு மண்டலத்திற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது குறுகிய கால போக்கை சாதகமாக வைத்திருக்கிறது என்பதை வலியுறுத்தினார்.

"உடனடி ஆதரவு 25,800-ல் அமைந்துள்ளது, அதேசமயம் எதிர்ப்பு 26,100–26,150-ல் காணப்படுகிறது. எதிர்ப்பை உடைத்து நீடித்த நகர்வு மேலும் உயர்வுக்கு வழிவகுக்கும். அதே சமயம், ஆதரவைத் தக்கவைக்கத் தவறினால் சந்தை ஒருங்கிணைப்புக்கு (consolidation) ஆளாகலாம்," என்று ஷா குறிப்பிட்டார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+