இந்திய பங்குச் சந்தைகள், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை திங்கட்கிழமை, ஜூலை 14 அன்று சரிவில் முடிவடைந்தன. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது நாளாக இந்திய பங்குச்சந்தை சரிவில் முடிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30% வரி விதிப்பதாக அறிவித்ததன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 82,253.46 புள்ளிகளில் முடிவடைந்தது, 247.01 புள்ளிகள் அல்லது 0.30% குறைந்தது. அதே நேரத்தில், நிஃப்டி50 குறியீடு 25,082.30 புள்ளிகளில் முடிவடைந்தது, 67.55 புள்ளிகள் அல்லது 0.27% சரிந்தது. இந்த வீழ்ச்சிகள் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையை எதிரொலிக்கிறது.

துறை சார்ந்த செயல்பாட்டைப் பொறுத்தவரை, தகவல் தொழில்நுட்பத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது, தொடர்ந்து நான்காவது நாளாக 1% குறைந்தது. டெக் மஹிந்திரா மற்றும் எல்.டி.டி.எஸ் ஆகியவை இந்தத் துறையில் அதிக சரிவை சந்தித்தன. மாறாக, பார்மா, நுகர்வோர் சாதனங்கள், மீடியா, ரியாலிட்டி மற்றும் பொதுத்துறை வங்கிகள் போன்ற துறைகள் 0.5% முதல் 1% வரை ஆதாயம் கண்டன.மொத்த சந்தை சரிவு ஏற்பட்ட போதிலும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.5% உயர்ந்தன. நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு 6 நாள் இழப்பை முறியடித்தது, நிஃப்டி ஸ்மால்கேப் 250 இரண்டு நாள் சரிவை முறியடித்தது.
நிஃப்டி குறியீட்டில் தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில், டெக் மஹிந்திரா, ஜியோ ஃபைனான்சியல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக், இன்போசிஸ், விப்ரோ மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தன. மறுபுறம், எடர்னல், டைட்டன், ஓ.என்.ஜி.சி, எச்.டி.எஃப்.சி லைஃப், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆதாயம் கண்டன. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $71க்கு மேல் உயர்ந்தது. இந்த அதிகரிப்பு ஓ.என்.ஜி.சி போன்ற நிறுவன பங்குகளுக்கு சாதகமாக அமைந்தது, இதன் விளைவாக 1% இதன் மதிப்பு உயர்ந்தது.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்ற என்ற அறிவிப்பு வர்த்தக பதற்றத்தை ஏற்படுத்தி, சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது. கூடுதலாக, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஏமாற்றமளிக்கும் வருவாய், முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்தது. வர்த்தகர்கள் புதன்கிழமை வெளியிடப்படவுள்ள ஜிடிபி புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட சீனாவின் முக்கிய பொருளாதார தரவுகளையும் எதிர்நோக்கி உள்ளனர்.
"இந்த வரி அறிவிப்பு மற்றும் வருவாய் பருவத்தின் மந்தமான தொடக்கம் ஆகியவற்றின் காரணமாக உள்நாட்டு சந்தையில் சரிவு தொடர்ந்தது. மூன்று வருட உயர் மட்டத்தில் மதிப்பிட்டு வர்த்தகம் செய்யப்படுவதால், முதலீட்டாளர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருக்கிறார்கள்," என்று ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸின் வினோத் நாயர் கூறினார்.
"வரி பதற்றம் சந்தை உணர்வை பாதிப்பதால் நிஃப்டி தொடர்ந்து சரிந்து வருகிறது," என்று எல்.கே.பி செக்யூரிட்டீஸின் ரூபக் தே கூறினார். பங்குதாரர்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் நுகர்வோர் விலை குறியீட்டு தரவையும் (CPI) எதிர்பார்த்து இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், 24,900-24,950 என்ற பகுதியில் சப்போர்ட் கிடைத்தால், 25,350 வரை செல்லக் நிகழக்கூடும், ஆனால் அது தவறினால் ஆழமான சரிவு ஏற்படலாம் என கூறுகிறார்.
மல்டிபிள்ஸ் பி.இ, விஐபி இண்டஸ்ட்ரீஸில் 32% பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டது, இதன் மூலம் அதன் பங்கு விலை 5% உயர்ந்தது. நேர்மறையான Q1 முடிவுகளைத் தொடர்ந்து ஓலா எலக்ட்ரிக் 20% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது.
இந்திய ரூபாய், அமெரிக்க டாலருக்கு எதிராக 19 பைசா குறைந்து, 85.99 ஆக முடிவடைந்தது. இதற்கு முந்தைய நாள் வர்த்தகத்தில் இதன் மதிப்பு 85.80 ஆக இருந்தது. "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வரி விதிக்கப்போவதாக அறிவித்ததையடுத்து இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது," என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸின் திலீப் பர்மார் கூறினார். இந்த மிரட்டல்கள் உலகளாவிய வர்த்தக பதற்றத்தை அதிகரித்துள்ளன என்றும், அவர் குறிப்பிட்டார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications