நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்ஃபோ எட்ஜ். 1995ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஆட்சேர்ப்பு, திருமண வரன், ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் தொடர்புடைய சேவைகளில் இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் விளம்பர நிறுவனமாகும் இணையம் சார்ந்த வணிகங்களை சொந்தமாக முதலீடு செய்து நடத்தி வருகிறது. 2006 ஏப்ரல் 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டது.
இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை 1:5 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கை ரூ.2 முக மதிப்பு கொண்ட 5 பங்குகளாக பிரிக்கப்படும். பங்கு பிரிப்புக்கு உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கு, 2025 மே 7ம் தேதியை பதிவு தேதியாக அறிவித்துள்ளது.

இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை அறிவித்ததையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இன்ஃபோ எட்ஜ் பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.6,813.50 வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.91 சதவீதம் உயர்ந்து ரூ.6,735.05ல் முடிவுற்றது.
இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.722 கோடி ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.15 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.627 கோடி ஈட்டியிருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு வருவாய் 2.99 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் நிகர லாபம் 288 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 142.01 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.119 கோடியாக இருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு லாபம் 239 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது.
2024 ஜூன் 4ம் தேதியன்று மும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.5,260க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.9,194.95ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் இப்பங்கின் விலை ரூ.6,754.50ல் வர்த்தகமானது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications