தொடர்ந்து சரியும் இன்ஃபோசிஸ் பங்கு விலை.. ரூ. 6,800 கோடியை இழந்த நாராயண மூர்த்தி குடும்பத்தினர்!

புதன்கிழமை அன்று முன்னணி ஐடி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 5.5% வரை சரிந்தன. கடந்த 2 நாட்களில் 8 சதவீதத்திற்கும் மேலான சரிவை சந்தித்து கரடியின் பிடியில் சிக்கிக் கொண்டது. அதாவது பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவைக் குறிக்க "Bear Market" என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.

முதலீட்டாளர்களிடம் ஏற்படும் ஒரு அச்ச உணர்வை குறிக்கும் விதமாக இந்த சொல் பங்குச்சந்தையில் அவ்வப்போது பயன்படுத்தப்படும். உதாரணமாக சர்வதேச அளவில் சில முடிவுகள் எடுக்கப்படும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவும். இதன் காரணமாக பங்கு விலையில் ஏதேனும் சரிவு ஏற்படும். அந்த சமயத்தில் நஷ்டத்தை குறிக்கும் விதமாக இந்த சொல் பயன்படுத்தப்படும். தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இதே நிலைதான்.

தொடர்ந்து சரியும் இன்ஃபோசிஸ் பங்கு விலை.. ரூ. 6,800 கோடியை இழந்த நாராயண மூர்த்தி குடும்பத்தினர்!

பங்குகளின் கடுமையான வீழ்ச்சி முதலீட்டாளர்களை மட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பிலிருந்தும் ரூ. 6,875 கோடியை குறைத்துள்ளது. புதன்கிழமை அன்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,563.80-ஐ எட்டியது .டிசம்பர் 2024-இல் 52 வார உச்சமான ரூ.2,006.80 ரூபாயை நெருங்கிய பங்கு விலை.. கிட்டத்தட்ட 22 சதவீதம் குறைந்து இன்று ரூ. 1563.80-ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4.02 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நாராயணமூர்த்தியின் குடும்பத்தின் சொத்து மதிப்பு புதன்கிழமை நிலவரப்படி ரூ.26,287 கோடியாக குறைந்துள்ளது. டிசம்பரில் இந்த மதிப்பு ரூ.33,163 கோடியாக இருந்தது.

இன்போசிஸ் பங்குகளில் நாராயணமூர்த்தி 0.40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு தற்போதைய சரிவின் காரணமாக ரூ. 684 கோடி குறைந்து 389.79 கோடியாக உள்ளது. அவருடைய மனைவியான சுதாமூர்த்தி 0.92 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு தற்போது ரூ.1573.54 கோடி குறைந்து ரூ.7600.41 கோடியாக உள்ளது.

இவர்களுடைய மகன் ரோகன் மூர்த்தி குடும்பத்திலேயே அதிக அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். ரோகன் மூர்த்தி சுமார் 1.62% பங்குகளை வைத்திருக்கிறார். தற்போது இதன் மதிப்பு ரூ. 2,771 கோடி குறைந்து ரூ. 13,378.5 கோடியாக குறைந்துள்ளது. நாராயணமூர்த்தியின் மகள் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி 1.04 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.1,779 கோடி குறைந்து ரூ.8,591 கோடியாக உள்ளது. நாராயண மூர்த்தியின் பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி 0.04% பங்குகளை வைத்திருக்கிறார். இவருடைய மதிப்பும் பங்குச் சந்தை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+