புதன்கிழமை அன்று முன்னணி ஐடி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 5.5% வரை சரிந்தன. கடந்த 2 நாட்களில் 8 சதவீதத்திற்கும் மேலான சரிவை சந்தித்து கரடியின் பிடியில் சிக்கிக் கொண்டது. அதாவது பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவைக் குறிக்க "Bear Market" என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.
முதலீட்டாளர்களிடம் ஏற்படும் ஒரு அச்ச உணர்வை குறிக்கும் விதமாக இந்த சொல் பங்குச்சந்தையில் அவ்வப்போது பயன்படுத்தப்படும். உதாரணமாக சர்வதேச அளவில் சில முடிவுகள் எடுக்கப்படும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவும். இதன் காரணமாக பங்கு விலையில் ஏதேனும் சரிவு ஏற்படும். அந்த சமயத்தில் நஷ்டத்தை குறிக்கும் விதமாக இந்த சொல் பயன்படுத்தப்படும். தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இதே நிலைதான்.

பங்குகளின் கடுமையான வீழ்ச்சி முதலீட்டாளர்களை மட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பிலிருந்தும் ரூ. 6,875 கோடியை குறைத்துள்ளது. புதன்கிழமை அன்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,563.80-ஐ எட்டியது .டிசம்பர் 2024-இல் 52 வார உச்சமான ரூ.2,006.80 ரூபாயை நெருங்கிய பங்கு விலை.. கிட்டத்தட்ட 22 சதவீதம் குறைந்து இன்று ரூ. 1563.80-ஆக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4.02 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நாராயணமூர்த்தியின் குடும்பத்தின் சொத்து மதிப்பு புதன்கிழமை நிலவரப்படி ரூ.26,287 கோடியாக குறைந்துள்ளது. டிசம்பரில் இந்த மதிப்பு ரூ.33,163 கோடியாக இருந்தது.
இன்போசிஸ் பங்குகளில் நாராயணமூர்த்தி 0.40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு தற்போதைய சரிவின் காரணமாக ரூ. 684 கோடி குறைந்து 389.79 கோடியாக உள்ளது. அவருடைய மனைவியான சுதாமூர்த்தி 0.92 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு தற்போது ரூ.1573.54 கோடி குறைந்து ரூ.7600.41 கோடியாக உள்ளது.
இவர்களுடைய மகன் ரோகன் மூர்த்தி குடும்பத்திலேயே அதிக அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். ரோகன் மூர்த்தி சுமார் 1.62% பங்குகளை வைத்திருக்கிறார். தற்போது இதன் மதிப்பு ரூ. 2,771 கோடி குறைந்து ரூ. 13,378.5 கோடியாக குறைந்துள்ளது. நாராயணமூர்த்தியின் மகள் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி 1.04 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.1,779 கோடி குறைந்து ரூ.8,591 கோடியாக உள்ளது. நாராயண மூர்த்தியின் பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி 0.04% பங்குகளை வைத்திருக்கிறார். இவருடைய மதிப்பும் பங்குச் சந்தை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications