இன்போசிஸ் சாயம் வெளுத்தது.. திங்கட்கிழமை நடந்த டிவிஸ்ட்..!!

இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது பங்கு முதலீட்டாளர்களை தக்க வைக்கும் பொருட்டு கடந்த வாரம் வெளியிட்ட காலாண்டு முடிவில் ஈவுத்தொகையை அறிவித்தது. இந்த ஈவுத்தொகை பெறுவதற்காக மக்கள் ரெக்கார்டு தேதி வரையில் மக்கள் காதிருந்த நிலையில், இத்தேதி கடந்த நிலையில் இன்று அதிகப்படியான பங்குகள் விற்கப்பட்டு முதலீட்டாளர்கள் வெளியேற துவங்கியுள்ளனர்.

இன்போசிஸ் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் அதிகப்படியான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக எதிர்கொண்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சி, ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், புதிய வர்த்தகம் கிடைப்பதில் தடுமாற்றம் போன்றவற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது.

இன்போசிஸ் சாயம் வெளுத்தது.. திங்கட்கிழமை நடந்த டிவிஸ்ட்..!!

இந்த நிலையை சமாளிக்கவே இன்போசிஸ் மாபெரும் பங்கு பைபேக் திட்டத்தை அறிவித்தது. இதேவேளையில் இத்திட்டத்தில் இன்போசிஸ் நிறுவனர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை என கூறிய சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தான் ஈவுத்தொகைக்கான ரெக்கார்ட் தேதி முடிந்தது, இதன் வாயிலாக இன்று இன்போசிஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனம், 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒரு பங்குக்கு 23 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது. இந்த ஈவுத்தொகை, நவம்பர் 7 அன்று தகுதியான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இதற்கான பங்குதாரர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியை இம்மாதம் 24ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அக்டோபர் 24 அன்று அல்லது அதற்கு முன் பங்குகளை வாங்கியிருந்தால் மட்டுமே இந்த ஈவுத்தொகைக்கு தகுதி பெறுவர்.

இந்தியாவில் தற்போது T+1 தீர்வு முறையில் இயங்கும் காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுடன் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஈவுத்தொகையை கிடைக்கும் காரணத்தால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்க துவங்கியுள்ளனர்.

ஈவுத்தொகைக்கான பதிவு தேதி முடிந்ததை அடுத்து, இன்ஃபோசிஸ் பங்குகள் சுமார் 2 சதவீதம் சரிவை சந்தித்து அதன் சாயம் வெளுக்க துவங்கியுள்ளது. பொதுவாக, பங்குச் சந்தையில் ஈவுத்தொகை பதிவு தேதி முடிந்த பிறகு, பங்கு விலையில் தற்காலிக சரிவை ஏற்படுத்தும்.

இதன் எதிரொலியாக இன்போசிஸ் பங்குகள் சுமார் 2 சதவீத்திற்கும் மேல் சரிந்து 1498 ரூபாய் அளவீட்டை எட்டியது. இன்போசிஸ்-ன் 52 வார உயர்வாக 2006.45 ரூபாயாக உள்ளது, 52 வார குறைவான விலை 1307 ரூபாய் அளவில் உள்ளது. மதிய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1.34 சதவீத சரிவுடன் 1504.90 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+