அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபலமான நிறுவனம் இன்டெல். இந்நிறுவனம் டேட்டா சென்டர்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் சிப் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இத்துறையில் பல தசாப்தங்களாக கொடி கட்ட பறந்த இன்டெல் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக பல முனைகளில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இன்டெல் நிறுவனம், தரவு மையங்கள் (டேட்டா சென்டர்கள்) தனிநபர் கணினிகள் ஆகிய இரண்டிலும் தனது சந்தை பங்கை கணிசமாக இழந்துள்ளது. மேலும் சிப் வணிகத்தில தனது சந்தை பங்களிப்பை இந்நிறுவனம் இழந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இன்டெல்லின் பங்கு விலை சுமார் 60 சதவீதம் சரிவு கண்டுள்ளது. ஏஐ தேவையை பயன்படுத்திக் கொண்ட போட்டியாளர்களுடன் போட்டியிட முடியாத இன்டெல்லின் இயலாமையால் முதலீட்டாளர்கள் விரக்தியடைந்துள்ளனர். மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, இன்டெல் நிறுவனம் அதுவரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பாட் கெல்சிங்கரை அதிரடியாக நீக்கியது. இதனால் இந்நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில் தற்போது இன்டெல் நிறுவனம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிப் பு டானை அறிவித்தது. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று இன்டெல் பங்கு விலை 14 சதவீதம் உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் இன்டெல் பங்கு விலை 14.60 சதவீதம் அதிகரித்து 23.70 டாலராக உயர்ந்தது. வலுவான தலைவராக பார்க்கப்படும் லிப் பு டான், இன்டெல் நிறுவனத்துக்கு புதியவர் அல்ல.
இன்டெல்லின் முன்னாள் வாரிய உறுப்பினராக இருந்த லிப் பு டான், நிறுவனத்தின் உத்தி குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். செயற்கை நுண்ணறிவு ஏற்றத்தை இழந்த பிறகு, செமிகண்டக்கர் துறையில் இன்டெல் தனது நிலையை மீண்டும் பெற போராடி வரும் ஒரு முக்கியமான நேரத்தில் லிப் பு டான் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக வந்திருப்பது அந்நிறுவனத்துக்கு பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
லிப் யு டான் வருகை குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், டானின் நியமனம் இன்டெல்லுக்கு சிறந்த விளைவுகளில் ஒன்றாகும். இன்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரியாக டான் பொறுப்பேற்றது, பங்குதாரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. சிப் துறையில் அவரது ஆழமான உறவுகள் இன்டெல்லின் ஒப்பந்த உற்பத்தி வணிகத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வர உதவும் என தெரிவித்தனர். லிப் பு டான் அடுத்த வாரம் முறைப்படி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார். அவரது வருகை இன்டெல் நிறுவனத்தின் உத்தியில் மாற்றத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications