இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இன்று கூட சென்செக்ஸ் மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்பு வரை ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வந்தது. ஆனால் ஆர்பிஐ-ன் வட்டி விகித முடிவுகள் வெளியான பின் தொடர்ந்து சரியத் தொடங்கியது.
இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 433 புள்ளிகள் இறக்கம் கண்டு வர்த்தகமானது. வங்கி துறை சார் பங்குகள் இன்றைய இறக்கத்துக்கு பெரிய அளவில் வலு சேர்த்தன. இன்று சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கியதற்கு காரணம் ஆர்பிஐ வட்டி விகித அறிவிப்புகள் மற்றும் ஜிடிபி கணிப்புகள் தான் என்பதை ரெலிகேர் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ராவும் உறுதி செய்கிறார்.

மத்திய ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதார ஜிடிபியைப் பற்றிப் பேசும் போது, இந்தியாவின் இன்னும் உள் நாட்டுத் தேவை அதிகரிக்கவே இல்லை. இன்னும் பலவீனமாகவே இருக்கிறது. அதோடு இந்தியாவில் வியாபார எதிர்பார்ப்பு இன்டெக்ஸில் மத்திய ரிசர்வ் வங்கியின் தொழில் துறை கணிப்பு சர்வேயிலும் நெகட்டிவ்வாகவே இருக்கிறது. அதாவது தொழில் துறையினர் எந்த ஒரு விரிவாக்கப் பணிகளையும் மேற்கொள்ளவே இல்லை என்பதை மேலே சொன்ன சர்வேயும் உறுதி செய்கிறது.
அதோடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு அல்லது மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வியாபாரமும் சர்வதேச காரணிகளால் குறிப்பாக அமெரிக்க சீன வர்த்தகப் போராலும், உலகப் பொருளாதார மந்த நிலையாலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படியாக மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த செய்திகள் அனைத்தும் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. ஆக கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் மட்டும் சென்செக்ஸ் சுமாராக 1,300 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது. இதனால் சென்செக்ஸில் வியாபாரம் செய்யும் முதலீட்டாளர்கள் முதல் வர்த்தகர்கள் வரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்து இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications