பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இந்திய பங்குச்சந்தைகளின் சரிவுக்கு மத்தியிலும் ரயில்வே பங்குகள் இன்று ஏற்றம் கண்டன. பொதுத்துறை நிறுவனங்களான ஐஆர்சிஓஎன் (IRCON) இண்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆகியவற்றை இணைப்பதற்கான அதிகாரப்பூர்வ முன்மொழிவை ரயில்வே அமைச்சகம் முன்வைத்ததாக வெளியான செய்தியை அடுத்து, ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் 11 சதவீதம் வரை உயர்ந்தன.

இந்த இணைப்புச் செய்தியைத் தொடர்ந்து, ஐஆர்சிஓஎன் பங்குகள் தேசிய பங்குச்சந்தையில் (NSE) மதியம் 1:30 மணியளவில் ஒரு பங்கு ரூ148.75 ஆக 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்த நிலையில், ஆர்.வி.என்.எல் பங்குகளின் மதிப்பு ரூ288.10 ஆக 3.17 சதவீதம் அதிகரித்தது. பி.எஸ்.யு கனெக்ட் (PSU Connect) செய்தி நிறுவனம் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவலை வெளியிட்டது.

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

இருப்பினும், இந்த இணைப்பு தொடர்பான செய்திகளை ஐஆர்சிஓஎன் நிறுவனம் உடனடியாக மறுத்துள்ளது. "எந்தவொரு விவாதம் அல்லது பேச்சுவார்த்தையிலும் நிறுவனம் ஈடுபடவில்லை" என்று தனது பங்குச்சந்தை அறிக்கையில் ஐஆர்சிஓஎன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த இணைப்புச் செய்தி மற்ற ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளிலும் எதிரொலித்தது.

அதன்படி, ரயில்டெல் (RailTel) பங்குகள் 4.2 சதவீதமும், ரிட்ஸ் (RITES) பங்குகள் 3.5 சதவீதமும், ஐஆர்எஃப்சி (IRFC) பங்குகள் 1.5 சதவீதமும் உயர்ந்தன. ஐஆர்சிஓஎன் என்பது போக்குவரத்து உள்கட்டமைப்பு துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமாகும். இது தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட 31 நாடுகளில் 900க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, உலகளவில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. ஐஆர்சிஓஎன் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.

ஆர்.வி.என்.எல், ரயில்வே அமைச்சகத்தின் திட்டச் செயலாக்கத்திற்கான பிரத்யேக அமைப்பாகும். இது உள்நாட்டு திட்டங்களில் கவனம் செலுத்தும் ஒரு சக்திவாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது. இந்தியாவின் ரயில்வே மின்மயமாக்கல் பணிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான பணிகளுக்கு இது பொறுப்பாகும். ஆர்.வி.என்.எல் நிறுவனமும் ஒரு நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.

அரசு நிறுவனங்களின் பங்கு உயர்வின் தாக்கம் தனியார் ரயில்வே துறையிலும் பிரதிபலித்தது. ஜூபிடர் வேகன்ஸ் (Jupiter Wagons) பங்குகள் ஒரு பங்கு ரூ293.35 ஆக 15 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தன. மேலும், டெக்ஸ்மாகோ ரயில் & இன்ஜினியரிங் (Texmaco Rail & Engineering) பங்குகள் ஏறத்தாழ 6 சதவீதமும், டைட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ் (Titagarh Rail Systems) பங்குகள் ரூ690.80 ஆக 5 சதவீதமும் தேசிய பங்குச்சந்தையில் அதிகரித்தன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+