இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி நிறுவனம், சுற்றுலா மற்றும் டிக்கெட் விற்பனையினை செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இதன் டிசம்பர் காலாண்டு முடிவில் அதன் நிகரபாலம் 22% அதிகரித்து, 256 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 209 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கிடையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு பங்குக்கு இடைக்கால டிவிடெண்டாக 3.5 ரூபாயினை அறிவித்துள்ளது. இது இப்பங்கின் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
செயல்பாட்டின் மூலம் வருவாய்
இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 70% அதிகரித்து, டிசம்பர் காலாண்டில் 918 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 540 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் வரிக்கு பிந்தைய லாபமானது செயல்பாடுகள் அதிகரித்த நிலையில் 13% அதிகரித்து, 226 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் விகிதமானது 13% அதிகரித்து, 806 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரெக்கார்டு தேதி
இந்த நிறுவனம் இடைக்கால டிவிடெண்டினை அறிவித்துள்ள நிலையில், அதற்கான ரெக்கார்டு தேதியாக பிப்ரவரி 22- ஆக அறிவித்துள்ளது.
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் அனைத்து துறைகளிலும் வலுவான வளர்ச்சியினை கண்டிருந்தாலும், இணையத்தில் டிக்கெட் பதிவு வளர்ச்சியானது நல்ல வளர்ச்சி கண்டும் காணப்பட்டது. இதன் காரணமாக இதன் வருவாய் விகிதமானது அதிகரித்துள்ளது.
துறை வாரியாக வருமானம்
இதில் கேட்டரிங் சேவையில் வருவாய் விகிதம் 275% அதிகரித்து, 394 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 105 கோடி ரூபாயாக இருந்தது.
இதே ரயில் நீர் பிரிவில் வளர்ச்சி விகிதமானது 55% அதிகரித்து, 79 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 68 கோடி ரூபாயாக இருந்தது.
டிக்கெட் விற்பனை பிரிவு
இணையத்தில் டிக்கெட் விற்பனை பிரிவில் வருவாய் விகிதமானது 4% குறைந்து, 301 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டி; 313 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இதன் சுற்றுலா வணிகம் பிரிவில் வளர்ச்சி 79% அதிகரித்து, 122 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம் என்ன?
இதற்கிடையில் இன்று ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் இன்று 1.58% அதிகரித்து, 651.45 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 656.70 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 637 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.59% அதிகரித்து, 651.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 656.60 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 637.20 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 868.10 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 557 ரூபாயாகவும் உள்ளது.
போட்டி குறைவு
ஐஆர்சிடிசி-யை பொறுத்தவரையில் போட்டி என்பது மிக மிக குறைவே. ஆக ஐஆர்சிடிசி வளர்ச்சியானது தொடர்ந்து வளர்ச்சி பாதையில் செல்லவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதுவும் இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications