இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதுதான் முதல் படி. ரயில் நிலையங்களில் உள்ள கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதை விட, இப்போது ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிகவும் சுலபமானது. இதற்காக, இந்திய ரயில்வேயின் IRCTC இணையதளம் மற்றும் செயலி பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில், ரயில்வே அமைச்சகம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கியுள்ளது. இது டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
IRCTC-யில் ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்?: பொதுவாக, IRCTC பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால், உங்கள் IRCTC பயனர் சுயவிவரத்துடன் ஆதாரை இணைப்பதன் மூலம், இந்த வரம்பை அதிகரிக்க முடியும்.

ஆதார் இணைக்கப்படாதவர்கள்: ஆதார் இணைக்காதவர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ஆதார் இணைத்தவர்கள்: IRCTC பயனர் சுயவிவரத்துடன் ஆதாரை இணைப்பதன் மூலம், பயணிகள் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், மேலும் மாதத்திற்கு 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யும் வரம்பைப் பெறலாம். அத்துடன், IRCTC இ-வாலெட் சேவையிலும் பதிவு செய்யலாம்.
IRCTC டிக்கெட் முன்பதிவு விதிகள்: ஒரு மாதத்தில் 12க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை எவ்வாறு முன்பதிவு செய்வது?: ஒரு மாதத்தில் 12க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, இரண்டு முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்
IRCTC பயனர் சுயவிவரம் ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பயணிக்கும் பயணிகளில் குறைந்தபட்சம் ஒருவராவது ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இந்த வசதியைப் பெறுவதற்கான வழிமுறைகள்: IRCTC உள்நுழைவு: முதலில் IRCTC இணையதளம் அல்லது செயலியில் உங்கள் கணக்கை திறக்கவும்.
பயண விவரங்கள்: உங்கள் பயண விவரங்களை எந்த ஊரில் இருந்து எந்த ஊர், தேதி உள்ளிட்டு, முன்பதிவு செய்யத் தொடரவும்.
ரயில் தேர்வு: ரயில் பட்டியல் பக்கத்தில், நீங்கள் விரும்பிய ரயில் மற்றும் வகுப்பைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவைத் தொடர 'இப்போதே முன்பதிவு செய்' (Book Now) என்பதை கிளிக் செய்யவும்.
பயணிகளைச் சேர்த்தல்: பயணிகள் முன்பதிவு பக்கத்தில், 'பயணிகள் பெயர்' (Add Passenger) என்பதைக் கிளிக் செய்யவும். அப்போது ஒரு கீழ்தோன்றும் பட்டியல் (Dropdown list) வரும். இந்தப் பட்டியலில், நீங்கள் ஏற்கனவே முதன்மைப் பட்டியலில் (Master List) சேமித்து வைத்திருக்கும் அனைத்துப் பயணிகளும் காட்டப்படுவார்கள். இதில், ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயணியைத் தேர்ந்தெடுக்கவும். இவர்கள் பச்சை நிற டிக் மூலம் குறிக்கப்பட்டிருப்பார்கள்.
விவரங்கள் தானாகப் பூர்த்தி: ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயணியின் விவரங்கள், முன்பதிவு படிவத்தில் தானாகவே நிரப்பப்படும்.
மற்ற பயணிகளைச் சேர்த்தல்: ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயணியின் விவரங்கள் சேர்க்கப்பட்ட பிறகு, மற்ற பயணிகளின் விவரங்களை நீங்கள் முதன்மைப் பட்டியலில் இருந்து சேர்க்கலாம் அல்லது நீங்களே புதிதாக சேர்க்கலாம்.
முன்பதிவைத் தொடரவும்: அனைத்துப் பயணிகளின் விவரங்களையும் உள்ளிட்டு, முன்பதிவு செயல்முறையைத் தொடரவும்.
விவரங்களைச் சரிபார்க்கவும்: முன்பதிவு விவரங்களை மதிப்பாய்வு செய்யும் பக்கத்தில், 'பயணிக்கும் பயணிகள்' என்பதன் கீழ் ஆதார் சரிபார்க்கப்பட்ட உறுதிமொழி காட்டப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும்.
கட்டணம் செலுத்துதல்: உங்களுக்கு விருப்பமான கட்டண நுழைவாயிலைத் (Payment Gateway) தேர்ந்தெடுத்து, கட்டணப் பக்கத்திற்குச் சென்று பணத்தைச் செலுத்தவும்.
முன்பதிவு உறுதிப்படுத்தல்: வெற்றிகரமாகப் பணம் செலுத்தியவுடன், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, முன்பதிவு உறுதிப்படுத்தல் பக்கம் காட்டப்படும். உங்கள் டிக்கெட் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வரும்.
இந்த புதிய விதிகள், ஆதார் இணைப்பதன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவை இன்னும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் மாற்றியுள்ளது. பயணிகளுக்கு, குறிப்பாக அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு, இது ஒரு பெரிய வசதியாகும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications