புத்தாண்டில் ஹோட்டல் வணிகத்தை பிரிக்கும் ITC.. ஐடிசி பங்கு வைத்துள்ளவர்களுக்கு நிச்சயம் ஜாக்பாட்..!!

எஃப்எம்சிஜி துறை நிறுவனமான ஐடிசி தனது ஹோட்டல் வணிகத்தை ஜனவரி 1, 2025 முதல் பிரிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்தது. இந்த பிரிவின் கீழ், ஐடிசி தனது ஹோட்டல் வணிகத்தை ஒரு தனி பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றும். இதன்மூலம் ஐடிசி நிறுவனம் பங்குகளை விநியோகிப்பதற்கான பதிவு தேதியை ஜனவரி 6, 2025 என நிர்ணயித்துள்ளது.

ஆகஸ்ட் 2023 இல், ஐடிசி தனது ஹோட்டல் வணிகத்தை பிரிக்கும் திட்டங்களை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஐடிசி ஹோட்டல்களில் 40% பங்குகளைத் தக்க வைத்துக் கொள்ளும். மீதமுள்ள 60% பங்குகள் ஐடிசியின் தற்போதைய பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்குகளின் விகிதத்தில் ஒதுக்கப்படும், அதாவது ஐடிசி பங்குதாரர்கள் ஒவ்வொரு 10 ஐடிசி பங்குகளுக்கும் 1 ஐடிசி ஹோட்டல் பங்கைப் பெறுவார்கள்.

புத்தாண்டில் ஹோட்டல் வணிகத்தை பிரிக்கும் ITC.. ஐடிசி பங்கு வைத்துள்ளவர்களுக்கு நிச்சயம் ஜாக்பாட்..!!

பங்குகளை வாங்குவதற்கான கடைசி வாய்ப்பு: ஐடிசி ஹோட்டல்களின் பிரிப்புப் பலனைப் பெற விரும்பினால், ஜனவரி 3, 2025க்குள் ஐடிசி பங்குகளை வாங்க வேண்டும். அதே நேரத்தில் பதிவு தேதி ஜனவரி 6, 2025 மற்றும் அதே நாளில் ஐடிசி பங்குகள் அதற்கு முந்தைய விலையில் விற்பனை செய்யப்படும். இந்த சூழ்நிலையில், ஜனவரி 3, 2025க்குப் பிறகு முதலீட்டாளர்கள் வாங்கும் பங்குகள் ஐடிசி ஹோட்டல்களின் லாபத்தில் சேர்க்கப்படாது.

ஐடிசி ஹோட்டல்கள் பிரிக்கப்பட்ட பிறகு தன்னிச்சையாக செயல்படும்: இந்த பிரித்தலுக்குப் பிறகு, ஐடிசி ஹோட்டல்கள் ஒரு தனி நிறுவனமாக செயல்படும். இதன்மூலம், முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை வழங்க அதிக தெளிவு மற்றும் வாய்ப்பைப் பெறும். ஐடிசியின் சந்தை மதிப்பு தற்போது ரூ. 5,99,185.81 கோடியாக உள்ளது. மேலும் அதன் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை பிஎஸ்இயில் ரூ.478.90 ஆக உள்ளது. பங்குதாரர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் ஒரு புதிய நிறுவனத்தின் நன்மையைப் பெறுவார்கள், இது அவர்களின் முதலீட்டை மேலும் அதிகரிக்கலாம்.

ஐடிசி ஹோட்டல்கள் என்பது இந்தியாவின் முன்னணி சொகுசு ஹோட்டல் நிறுவனமாகும். ஐடிசி ஹோட்டல்கள் 90 இடங்களில் 140 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை இயக்குகின்றன. நிறுவனம் 1975 இல் நிறுவப்பட்டது. ஜனவரி 1 2025 ல் ஐடிசி குழுவிலிருந்து ஐடிசி ஹோட்டல் வணிகத்தை பிரிப்பதற்கு முன்னதாக, ஐடிசி ஓபராய் ஹோட்டல் தாய் நிறுவனமான EIH-ல் கூடுதலாக 2.44% பங்குகளை வாங்கியுள்ளது. செப்டம்பர் 2024 இல், ஈஐஎச்சில் இல் ஐடிசி இன் பங்கு 13.69% ஆக இருந்தது. இப்போது 16.13% ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தி லீலா மும்பையின் உரிமையாளரான HLV லிமிடெட் நிறுவனத்தில் ஐடிசி நிறுவனத்தில் 0.53% கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளது. இது நிறுவனத்தில் அதன் பங்குகளை 8.11% ஆகக் கொண்டு சென்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+