இந்தியாவின் பிரபல நகை விற்பனை நிறுவனத்தின் பங்கு மல்டிபேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நகை விற்பனையில் ஈடுபட்டுள்ளது.
தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூன் 28ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் தனது 52 வார உச்சமான 546 ரூபாயை எட்டியது.

முதன்முறையாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 50,000 கோடி என்ற அளவை எட்டியது. கடந்த 13 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 385 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை வழங்கியுள்ளது.
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 ஆகவும், புக் வேல்யூ 40.66 ஆகவும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 14,109 கோடி ரூபாய் ஆகும். லாபம் 432 கோடியாகவும் இருக்கிறது.
நிறுவன பங்குகளில் 60 சதவீதம் புரமோட்டர்கள் வசம் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 21 சதவீத பங்குகளும் , மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் 9.58 சதவீத பங்குகளும் கொண்டுள்ளன. இந்தியாவின் முக்கிய தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகளுக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டினை தந்துள்ளது.
இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய நகைகள் சில்லறை விற்பனை நிறுவனம் என்பதோடு மட்டும் இல்லாமல் 217 இடங்களில் இது கடைகளை வைத்து நடத்தி வருகிறது என மோதிலால் ஓஸ்வால் சுட்டிக்காட்டுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் கேஸ் ஃபுலோ என்பது அதிகரித்து அதன் கடன் அளவு குறையும் என கணித்துள்ளது. இந்த நிறுவனம் அண்மைக்காலமாக இளைஞர்களை கவரக்கூடிய வகையில் நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருவதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும் என்றும் இதன் காரணமாக பங்கு மதிப்பு உயரும் என்றும் கூறியுள்ளது.
நகை தொழிலில் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தையானது 2019 ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 36 முதல் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2019 முதல் 2024ம் ஆண்டு வரை நகை சந்தை மொத்தமாக 8% என்ற காம்பவுண்டிங் வருவாயை வழங்கியுள்ளது மற்றும் இந்த சந்தை மதிப்பானது 6400 பில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது. வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப கல்யாண் ஜூவல்லர்ஸ் யுக்தியை மாற்றுவதால் அதன் வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தரகு நிறுவனம் கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications