மும்பை: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை முறையாக ஆய்வு செய்து முதலீடு செய்வதில் எல்ஐசி நிறுவனம் ஜாம்பவானாக இருக்கிறது. அந்த வகையில் எல்ஐசி நிறுவனம் எந்த நிறுவனத்தில் நிறுவனத்தில் தன்னுடைய பங்கினை அதிகரிக்கிறது எந்த நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்கிறது என பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து உற்று நோக்குவார்கள்.
2025 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் எல்ஐசி நிறுவனம் தன்னுடைய ஈக்விட்டி போர்ட்போலியோவில் கணிசமான மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை எல்ஐசி நிறுவனம் அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ, இன்போசிஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை குறைத்து இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான எல்ஐசி 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஈக்விட்டி போர்ட்போலியோவை கொண்டு இருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனம் குறிப்பிட்ட சில நிறுவனங்களில் தன்னுடைய பங்கு மதிப்புகளை அதிகரித்து குறிப்பிட்ட சில நிறுவனங்களில் குறைத்து இருக்கிறது.
தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 81 நிறுவனங்களில் எல்ஐசி தன்னுடைய பங்கினை அதிகரித்துள்ளது ,அதேபோல 82 நிறுவனங்களில் தன்னுடைய பங்கினை குறைத்து இருக்கிறது. எல்ஐசி நிறுவனத்தின் ஈகிவிட்டி போர்ட்போலியோவின் மதிப்பு மார்ச் உடன் முடிந்த காலாண்டில் 0.7 சதவீதம் குறைந்துள்ளது .
எல்ஐசி நிறுவனம் 2.95 கோடி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கி இருக்கிறது இதற்காக இந்த நிறுவனம் 3,690 கோடி ரூபாயை செலுத்தி இருக்கிறது. எல்&டி நிறுவன பங்குகளை 2978 கோடி ரூபாய்க்கும் , ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை 2,472 கோடிக்கும் வாங்கி இருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகளை 1948 கோடி ரூபாய்க்கு வாங்கி வைத்திருக்கிறது. 2.23 கோடி டாடா மோட்டார்ஸ் பங்குகளை 1570 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 8.9% சரிவடைந்த போதிலும் எல்ஐசி அதனை வாய்ப்பாக கருதி பங்கினை அதிகரித்துள்ளது.
பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்திலும் 1631 கோடி ரூபாய்க்கு எல்ஐசி நிறுவனம் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியில் தன் வசம் இருந்த பங்குகளில் பங்குகளை 2006 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. இன்போசிஸ் ,டிசிஎஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களில் இருந்த பங்குகளையும் 4460 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. அதேபோல எல்ஐசி நிறுவனம் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய நிறுவனங்களில் தன் வசம் இருந்த பங்குகளையும் குறைத்து இருக்கிறது.
எல்ஐசி நிறுவனம் தன்னுடைய போர்ட்போலியோவில் எரிசக்தி மற்றும் நிதி சேவைகள் சார்ந்த துறைகளில் அதிக முதலீடு செய்திருக்கிறது. கமாடிட்டிஸ் பிரிவிலும் அதிக ஒதுக்கீடு செய்துள்ளது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார சூழல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு எல்ஐசி நிறுவனம் தன்னுடைய முதலீடுகளை மாற்றி அமைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications