நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி-யின் பொது பங்கு வெளியீடு (IPO) விரைவில் வெளியிடப்படலாம் என்ற எதிர்பாப்புகள் நிலவி வருகின்றது.
இதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஏற்கனவே இதற்கான அனுமதியினை IRDAI அனுமதி கொடுத்துள்ளது.
இதற்கிடையில் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கேட்டு செபிக்கு (SEBI) விண்ணப்பித்துள்ளது.
எதிர்பார்ப்பு
இதன் மூலம் 5% பங்குகளை விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பங்கு வெளியீடானது மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செபிக்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் படி( DRHP), எல்ஐசியின் 31 கோடிக்கும் அதிகமான பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபம் ட்வீட்
இது குறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயலாளர், துஹின் காந்தா பாண்டே தனது ட்வீட்டர் பக்கத்தில் செய்துள்ளார். அதில் எல்ஐசி-யின் DRHP அறிக்கையானது இன்று செபியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
OFS விற்பனை மட்டும் தான்
இந்த பங்கு வெளியீட்டில் அரசிடம் உள்ள பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. இதில் புதிய வெளியீடு என்பது இல்லை. இந்த பங்கு வெளியீட்டில் 10% வரை பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இதில் பாலிசிதாரர்களுக்கு, பங்கு வெளீயீட்டில் சில சலுகைகள் கூட இந்த பங்கு வெளியீட்டில் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது.
எதிர்பார்ப்பு
இந்த பங்கு வெளியீட்டினை டெலாய்ட் மற்றும் எஸ்பிஐ கேப்ஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கு முந்தைய ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த பங்கு வெளியீடானது விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications